« Home | போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: » | மறுபக்கம். » | தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்! » | மாமனிதர் ஞானரதன் » | தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை. » | மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம் » | ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும். » | இலங்கையில் இந்தியத் தூதுவராலயம் » | பெண் புலிகள் பற்றி றொய்ட்டர் » | வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம். »

ஹமாஸ் வெற்றி பற்றி விடுதலைப்புலிகள்

உலகின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும் ஹமாசின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: க.வே.பாலகுமாரன்

"உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (04.02.06) அரசியல் அரங்கம் பகுதியில் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:"உலகையே மிகுந்த பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் உள்ளாக்கி இருக்கக் கூடிய- உலகத்தை பாரிய இக்கட்டில் சிக்கிவிட்டிருக்கக் கூடிய ஒரு மாற்றம் குறித்து உங்களோடு பேசுகிறோம்.
"பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாசினது வெற்றிதான் இன்று மிக பரபரப்பாக பேசப்படுகிற செய்தியாக இருக்கிறது.

"கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஹமாஸ் இயக்கமானது மூன்றில் ஒரு பங்கு சபைகளைத் தன்வசம் கைப்பற்றிக் கொண்டது.

"அப்போதே ஹமாசின் எதிர்கால வெற்றி பற்றி எதிர்கூறப்பட்டாலும் ஹமாசே எதிர்பார்க்காதது என்று அந்த இயக்கம் சொல்கிற வகையில் பாரிய வெற்றி பெற்றிருக்கிறது.

"பலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் 132 ஆசனங்களில் 80 ஆசனங்களை ஹமாஸ் கைப்பற்றியிருப்பது உலகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எவரும் எதிர்பார்க்காத ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியை ஹமாஸ் எழுப்பியிருக்கிறது.

"உலகத்தையே குறிப்பாக ஆக்கிரமிப்பாளர்களை அவர்களது கடைசி ஆயுதங்களை- தந்திரோபாயங்களை எல்லாம் மிகுந்த இக்கட்டுக்கும் சிக்கலுக்கும் உள்ளாக்கியிருக்கிற ஹமாசின் வெற்றி குறித்து நாம் விரிவாக இன்று பேசுகிறோம்.

"ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியானது முற்றிலுமாக ஒரு புதிய விழிப்புணர்வுள்ள அமைப்பை சர்வதேசத்துக்குள் பிரதிநிதித்துவம் செய்கிறது. குறிப்பாக மிகப் பழைய அமைப்பான தாய் அமைப்பான பத்தா அமைப்பை மறுத்து- அதன் மூல உபாயத்தை முற்றாக மறுத்து ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஹமாஸ் எழுந்திருக்கிறது.

"இன்றைய அரபு உலகின் யதார்த்தமே ஹமாஸ் வெற்றிகளுக்கூடாக பிரதிபதிலிப்பதாக உலகம் கருதுகிறது. இந்தப் புதிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு உலகம் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டு ஏற்பட்டுள்ளது.

"இஸ்ரேலில் வருகிற மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் வாக்களிக்க உள்ள மக்கள் கூட இன்று மிகுந்த இக்கட்டுக்குள் சிக்கியுள்ளனர். அப்படியான ஒரு நெருக்கடியை ஹமாசின் இந்த வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.

"ஹமாஸ் என்ற சொல்லின் கருத்து தீரமும் துணிவும் என்பதோடு இஸ்லாமிய தேசியப் பற்றுணர்வைத் தாங்கிப் பிடித்தலை அந்தச் சொல் வெளிப்படுத்துகிறது.

"ஹமாஸ் இயக்கத்தின் தோற்றம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது.
"1920-களில் ஏற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் ஹமாஸ் தோற்றம் பெற்றது.
"அதனது விளைவாக 1987 களில் காசா போன்ற இடங்களில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புகளின் கிளையாக இந்த ஹமாஸ் உருவெடுத்தது.
"சேக் முகமது யாசின் மற்றும் முகமது அல் சகார் ஆகியோரால் இந்த இயக்கம் தோன்றியது.

"2004 ஆம் ஆண்டு இஸ்ரேலிய குண்டு வீச்சினால் முகமது யாசின் கொல்லப்பட்டார். சகார் தலைமையில் வளர்ந்த ஹமாஸ் பலஸ்தீனத்தின் பிரதமராக இன்று கருதப்படுகிற இஸ்மாயில் ஹனியா என்பவரது மூலம் உலகில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

"ஹமாசின் எழுச்சித் திட்டம் மிகவும் வித்தியாசமானது. ஒரு தீவிரவாத இயக்கம் போல ஹமாஸ் தோற்றம் காட்டினாலும் கூட அவர்களுடைய நிருவாகக் கட்டமைப்பு, மக்கள் பணிகள் என்பது உலகத்தையே பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் மொகமட் அல் சஹார்

"கடந்த வருடம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னால் அவர்களது நிர்வாகம் நடைபெற்ற விதம் அந்த மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை இன்று ஏற்படுத்தியிருக்கிறது. ஊழலற்ற, ஒழுங்கான மக்கள் நலன் தழுவிய அவர்களது அற்புதமான திட்டங்கள், அடிமட்ட மக்களைக் கவனித்த விதங்கள், சாதாரண மக்களின் வறுமை நிலையைப் போக்குவதற்கும், அவர்களது மணவாழ்க்கை, குழந்தைப் பேறு, மருத்துவமனைகள், கல்விச் சாலைகள் என பலவற்றுக்கூடாக சமூகத்தோடு இணைந்து அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அதுதான் இன்றைக்கு அவர்களுக்குப் பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறது.

"அராபத் தலைமையிலனா அல்பத்தா அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக பலஸ்தீன அதிகார சபையின் நிர்வாகமானது ஊழல்கள் நிறைந்து, மக்கள் நலனில் அக்கறையற்று குறிப்பிட்ட வர்த்தகத்தின் நலன்கள் மட்டும் பேணப்பட்ட ஒரு அமைப்பாக மாறியது.

"அந்த அமைப்புக்கு மக்கள் எதிர்ப்புக் காட்டியதால் ஹமாஸ் வென்றுள்ளது. ஆகவே ஹமாசின் வெற்றியானது புதிய தோற்றமாகக் கருதப்படுகிறது.
"சேக் முகமது யாசின் தலைமையில் உருவான ஹமாஸ் இயக்கமானது முஸ்லிம் அடிப்படைச் சிந்தனைகளை மக்களிடத்தில் முன்வைத்து அராபத்தின் பத்தாவுக்கு மாற்றாக இயங்கி வந்தது.

பலஸ்தீன பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள இஸ்மாயில் ஹனியா

"பேச்சுவார்த்தையை முற்றாக நிராகரித்தது இஸ்ரேலின் செயற்பாட்டை முற்றாக வெறுத்து 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பலஸ்தீனத் தாயகத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
"மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேலின் யோர்டான் நதி வரை பரந்திருக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகத்தை- காசா மேற்குக் கரை, ஜெருசலம் போன்றவற்றை உள்ளடக்கிய அந்தத் தாயகத்தை அவர்கள் கனவாகக் கொண்டிருந்தார்கள்.

"அதேபோல் ஒஸ்லோ உடன்பாடு, பலஸ்தீன அதிகார சபை ஆகியவற்றையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
"இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதுதான் ஹமாசின் நிலைப்பாடு. ஏனெனில் அவர்கள் பலஸ்தீனத் தாயகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற அடிப்படையில் ஹமாஸ் செயற்பட்டது.

"அது ஒரு தீவிரமான அமைப்பான தோற்றம் பெற்றார்கள். அதனது நிதி மூலமும் உலகம் முழுமைக்கும் பரந்து விரிந்திருந்தது. தங்களது நிதியை நன்றாகக் கணக்கிட்டு மக்களுகாகப் பயன்படுத்தினார்கள்.

"இந்த நிலைப்பாடு மிக அதிசயமான நிலைப்பாடு.

"1980-களில் அல்பத்தாவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காத இஸ்ரேலியர்கள் இது போன்ற தீவிரமான இயக்கத்திற்கு மறைமுகமான ஆதரவு கொடுத்ததை நாம் அறிவோம்.

"அல்பத்தாவின் மிதவாதப் போக்கையே செரிமானிக்க முடியாத இஸ்ரேலால் ஹமாசின் இந்த தீவிரவத்தன்மை எப்படி எதிர்கொள்ளப்படும் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.

"ஹமாசின் தோற்றம் என்பது மத்திய கிழக்கில் ஒரு உண்மையான அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத இயலாமையை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது என்றுதான் கருதுகிறார்கள்.
"பத்தா அமைப்பின் அழிவு- தலைமையின் சீரழிவாகவும் கருதப்படும் நிலையில் ஹமாசின் தோற்றமானது இன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

"எந்த ஜனநாயக அமைப்பை நம்பி- எந்த அல்பத்தாவின் செயற்பாட்டை நம்பி பலஸ்தீன அதிகார சபையைக் கொடுக்க உலகம் முன்வந்ததோ அதே சபையை அவர்கள் சொல்லுகிற ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவே ஹமாஸ் கைப்பற்றியிருப்பது இந்த உலகத்துக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

"பலஸ்தீன அதிகார சபையினது மிகப் பெரும் வருமானங்கள் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவாலும் வழங்கப்படுகின்றன.
"வருடாந்தம் 400 மில்லியன் டொலரை அமெரிக்காவும் 300 மில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலியத் தரப்பிலிருந்து வரிகள் என்கிற வகையிலுமாக பலஸ்தீன அதிகார சபை இயங்கியது.
"இந்த நிதியை இன்று கொடுப்பார்களா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அளிக்காதுவிட்டால் முழு பலஸ்தீன மக்களையும் பழிவாங்கியதாகும். இப்படியான மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிற உலகம் என்ன முடிவை மேற்கொள்ளப் போகிறது என்பதை அனைவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஏனெனில் ஹமாசின் இந்த வெற்றியானது உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைப் புகுத்தியுள்ளது.
"பயங்கரவாத இயக்கம்- தீவிரவாத இயக்கம்- மக்கள் நலன் விரும்பாத இயக்கம்- மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இயக்கம் என்று எந்த இயக்கத்தைச் சொன்னார்களோ அதே இயக்கம் மக்களினது ஏகோபித்த ஆதரவோடு தெரிவு செய்யப்படுகிற போது அவர்களது எல்லாக் கணக்கீடுகளும், எதிர்கூறல்களும் தவறாகிப் போகின்றன. இதனால் உலகம் இன்று திக்கித் திணறி நிற்கிறது.

"இந்த நிலையையே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் உலகம் எதிர்கொள்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
"40 ஆண்டுகால அடிமை வாழ்வு- ஏறத்தாழ 20 ஆண்டுகால அல் பத்தாவின் பேச்சுவார்த்தைகள் மற்றும் கடைசி 10 ஆண்டுகால பலஸ்தீன அதிகார சபை எவையுமே பலஸ்தீன மக்களுக்கு எதையுமே பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை இன்று ஹமாசின் வெற்றி மூலம் உலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

"உலகம் முன்வைத்த இவற்றுக்கு மாற்றாக ஹமாஸ் முன்வைத்த தீவிரவாதத் தன்மைக்கு அப்பால்- ஹமாஸ் அண்மைக்காலமாக பாரிய முதிர்ச்சியைக் காட்டிக் கொண்டு வருகிறது.

"கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னால், ஹமாஸ் தன்னுடைய நிருவாகத்தை நடத்திய விதம், பலஸ்தீனிய மக்களோடு தன் உறவை அது பேணிய விதம், பலஸ்தீனத்தில் சமயச் சார்பற்ற முறையில் அது செயற்பட்ட தன்மை, இஸ்ரேலியத் தலைவர்களோடு தொடர்புகளைப் பேணிய விதம் எனப் பல வகைகளில் ஹமாஸ் ஒரு முதிர்ச்சியான இயக்கமாகத் தென்படுகிறது.
"அடுத்த பலஸ்தீனப் பிரதமராக வரப்போகிற இஸ்மாயில் ஹனியா அண்மையில்,

"நாங்கள் முதிர்ச்சியான இயக்கம். நாங்கள் வெறுமனே பலஸ்தீன மக்களோடு நிற்கவில்லை. மத்திய கிழக்கின் அரபு உலக மக்களோடு நாங்கள் நிற்கிறோம். அந்த மக்களினது கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அதுபோல சர்வதேசத்தின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
"இப்படியான ஒரு மென்மைப் போக்கை ஹமாஸ் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அறிகுறி என்று அனைவரும் கருதுகின்றனர்.
"இத்தகைய நிலையில் உலகமும் அதனது எடுபிடியான இஸ்ரேலும் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

"இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்பது உலகத்துக்கு ஒரு மிகப் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.
"ஒரு இனத்தினது விடுதலையை ஒரு சில நாடுகள் எவ்வாறு தடுக்க முடியும்?
அல்லது
"ஒரு இனத்தினது தீர்ப்பை- கருத்தை எவ்வாறு மறுதலிக்க முடியும்?
"என்று எழும்புகிற குரலினை தமிழீழ மக்களாகிய நாங்களும் பிரதிபலிக்கிறோம்.

"எல்லா வகையிலும் பலவீனப்பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கம்,
"ஒரு அடி நிலத்தைக் கூட மீட்க முடியாத அந்த இயக்கம்-
"தொடர்ந்து போராடக் கூடிய வழிமுறைகளுக்கு ஊடாகவும்-
"தவறிழைத்தோரிடமிருந்து விலகி புதிய அமைப்பைக் கட்டிச் செயற்படுதல் என்ற வகையில்
"பலஸ்தீன மக்களின் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்கக் கூடிய தலைமையை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

"அந்தத் தலைமையை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றோ அல்லது வேறு வகையிலோ குறிப்பிட்டாலும் கூட இப்படியான தோற்றப்பாடுகளுக்கு உலகம் ஒரு காரணம் என்பதை ஏற்க வேண்டிய நிலை இருக்கிறது.
"இஸ்லாமிய தீவிரவாதம் தோன்றுவதற்கு யார் காரணம்?
"பனிப்போர்க் கால கட்டத்தில் தலிபான்களின் தோற்றத்துக்கு வித்திட்டது அல்லது பின்லேடனின் தோற்றத்துக்கு வித்திட்டது யார் என்பது உலகத்துக்கு நன்றாகத் தெரியும்.

"அதேபோல் 1980-களில் இந்தத் தீவிராத இயக்கங்களைக் கண்டும் காணாதது போல் செயற்பட்டதாக அப்போது பத்தா அமைப்பு குற்றம் சாட்டியது எங்களுக்கு நினைவுக்கு வருகிறது.
"இந்தியாவின் பிந்தரன்வாலேயைக் கொண்டு காலிஸ்தான் விடுதலை இயக்கத்தை இங்கிலாந்து உருவாக்கியது போல் இஸ்ரேலின் உளவுத் துறையினரும் செயற்பட்டனர்.

"இவ்வாறான உத்திகளைக் கடைபிடித்து எல்லாவற்றையும் மீறி நாட்டுப்பற்றோடும் மிகத் தெளிவான பார்வையோடும் ஒரு இயக்கம் செயற்படும் போது அந்த இயக்கம் மக்களினது முழுமையான ஆதரவைப் பெற முடியும் என்பது பலஸ்தீன வரலாற்றின் விளைபொருளாக உலகத்துக்கு வந்திருக்கிறது.

"போராட்ட அமைப்புகளுக்குக் கூட இந்தச் செய்தியானது வித்தியாசமான பரிணாமத்திலே வந்து சேருகிறது.
"பலஸ்தீனத்தினது தீர்வை நோக்கிய இந்தப் பயணத்தில் ஹமாசினது பங்களிப்பு எவ்வாறு கருதப்படப் போகிறது?
"ஹமாசின் வெற்றி மூலம் முழு பலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடிய- முற்றிலுமாக ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமாக கருதக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா?

அல்லது
"ஒரு புதிய பரிணாமத்தை உலகம் உணர்ந்து தன் போக்கினை மாற்றி ஹமாசும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இறங்கி இருதரப்பினரும் சந்திக்கிற வாய்ப்புக்கூடாக இனிவரும் நாட்களில் பலஸ்தீன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா?
என்பதுதான் இந்த வெற்றிக்கூடாக எழுந்து நிற்கிறது.

"ஹமாசின் வெற்றி என்பது அடிப்படையில் ஒரு தர்க்க ரீதியாக நிகழ்ந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

"50 வருட அமைதி முயற்சிக்கூடாக
"50 விழுக்காடு பலஸ்தீன மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற-
"28 அல்லது 29 விழுக்காடு மக்கள் வேலையற்று இருக்கிற நிலையில
"பலஸ்தீன மக்களுடைய எதிர்காலம் குறித்த கவலையோடு இப்போது ஹமாஸ் வெளிவந்து நிற்கிறது.

"இஸ்ரேலிய அரசை முற்றாக அழித்தல், அமைதி உடன்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தல் என்கிற தன்னுடைய கோட்பாடுகளில் ஹமாஸ் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்துச் செயற்படப் போகிறது என்பது காலப்போக்கில் தெரிய வரும்.

"அதேபோல் நிலைமையை உணர்ந்து உலகம் தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா? கொள்ளாதா? என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக மாறி இருக்கிறது.
"ஹமாசின் வெற்றியானது உலகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.
"மத்திய கிழக்கின் இந்த நிலைமைகளைப் பார்க்கும் போது, தென்னாசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்கும் உலகத்துக்கு முன்னால் பெருத்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.

"மத்திய கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் உலகத்தை நோக்கி எதிரொலிக்கிற இந்தக் கேள்விகள் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
"1987ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டது. அதனுடைய நிதி மூலங்களான தொண்டர் அமைப்புகளும் சர்வதேசமெங்கும் தடை செய்யப்பட்டமையும் அவர்களது வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம்.

"அதே ஹமாஸ் இயக்கம்தான் இன்று பலஸ்தீன அரசைப் பொறுப்பேற்கப் போகிறது.
"அப்படிப் பொறுப்பேற்கின்ற போது ஹமாஸ் மீதான தடையை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? நிதிகள் வழங்கப் போகிறார்களா? இல்லையா?
"எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது நிச்சயமாக உலக நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து கீழிறங்கி இந்த அரசை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்பதாகத்தான் கூறப்படுகிறது.
"மக்களது கருத்துக்கு மாண்பு கொடுத்து- மதிப்பு கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதை தமிழீழ மக்கள் தங்களது செயற்பாடுகள் மூலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்கள் இதை பெருமதிப்பிற்குரிய விடயமாகக் கருதுகிறோம்"

என்றார் க.வே.பாலகுமாரன்.
***************************
நன்றி: புதினம்.

Labels: , ,

எழுதிக்கொள்வது: ds

றொம்ப நண்றி

20.29 13.2.2006

hamasum puliJum onra?hamas thanudaja aadkalai thaane konrullatha@?rajev mathiti adkalai hamas konrullatha? epadijellam eluthi thamil enathai ennada sejja mudivu eduthulleerkal.

எழுதிக்கொள்வது: hameed abdullah

thangalathu ennangal sinthikkavum seerthookkiparkkavum thakkana....

2.1 5.3.2006

hamaas vetrik kuritthu karutthu veliyittulla viduthalai pulikal ennam paarattathakkathu....

ds, அநாமதேயம், அப்துல்லா,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அநாமதேய நண்பரே,
நான் எழுதுவதால் தமிழினம் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. உங்களைப் போல சிலரின் வயிற்றெரிச்சலைக் கிழப்புவதைத்தவிர இந்த எழுத்துக்கு வேறு எந்தப் பயனுமில்லை. எனினும் வாசித்ததுக்கு நன்றி.
எனனும் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
உங்களுக்கு ஹமாசின் வெற்றி வயிற்றெரிச்சலைக் கிழப்புகிறதா?
அல்லது புலிகள் வயிற்றெரிச்சலைக் கிழப்புகிறார்களா?
அல்லது இருவருமேதானா?

Post a Comment