Sunday, January 22, 2006

மறுபக்கம்.

கடந்த ஞாயிற்றுத் தினக்குரலில் வெளிவந்த கோகர்ணனின் மறுபக்கம் பத்தி.

போர்கள் படையினரை மட்டுமே பாதித்த ஒரு காலம் என்றுமே இருந்ததாக நான் நம்பவில்லை. ஏனெனின் போர்கள் வெறும் வீர விளையாட்டுகளல்ல. விவாதங்களும் விளையாட்டுப் போட்டிகளும் கூடப் போட்டியிடுகின்றவர்களை மட்டுமே பாதிக்கிற விடயங்களாக இருந்ததாகக் கூற முடியாது. எத்தனையோ விளையாட்டுப் போட்டிகள் பல பார்வையாளர்களது சாவுக்குக் காரணமாகியுள்ளன. போர்களில் மோதுகின்ற படையினரை விட மற்றவர்கட்கும் கேடு தவிர்க்கப்பட வேண்டும் என்பது பேச்சளவில் நின்று விடுகிறது. ஒவ்வொரு போரிலும் ஆயுதந்தரித்தோரை விட அதிகளவில் ஆயுதந் தரியாதோரே இறந்துள்ளனர். பல சமயங்களில் வேண்டுமென்றே இவ்வாறான கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, குண்டு வீச்சு விமானங்கள் நகரங்களை அழித்துள்ளன. ஹிரோஷிமா பற்றியும் நாகசாகி பற்றியும் நாம் அறியக் காரணம் அங்கு அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவு. அதற்கு முன்பு யப்பானும் ஜேர்மனியும் பிரித்தனியாவின் மீதும் அதன் கொலனிகள் மீதும் நடத்திய தாக்குதல்களில் பல நகரங்கள் அழிந்துள்ளன. போரில் ஜேர்மனி சரணடைந்த பின்பும் பிரித்தானிய விமானங்கள் ட்றெஸ்டென், ஹம்பர்க் ஆகிய ஜேர்மன் நகரங்கள் மீது குண்டு வீசிப் பேரழிவை ஏற்படுத்தின.

போர்களில் நாகரிகமான போர்என எதுவுமே கிடையாது. விடுதலைப் போராட்டங்களை விட்டால், தொடுக்கப்படும் எல்லாப் போர்களும் அதிகாரத்தைப் பேணுவதற்கான அடக்குமுறை பற்றியனவே. எனவேதான், போர்கள் முடிந்த பின்பு, போர்க்காலத்தில் நடந்ததைவிடக் கொடிய செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வன்முறை விரும்பத்தகாதது. எனினும், அது நம்மிடையே இருக்கிறது. அது நம்மீது திணிக்கப்படுகிறது. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் வன்முறைக்குள் இ ழுக்கப்படுகிறோம். வன்முறை இல்லாமல் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளிலெல்லாம் வன்முறை வலிந்து நுழைக்கப்பட்டுள்ளது. இல்லாதுபோனால் , இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை ஒரு போராக விருத்தியடைந்திருக்கத் தேவையில்லை.

போர் மூலம் தீர்க்க இயலாத பிரச்சினையைப் போர் இல்லாமல் தீர்க்க இயலாத ஒரு நிலைமைக்குத் தள்ளிவிட்டதில் பேரினவாதிகட்கு மட்டுமன்றி, இலங்கையில் குட்டையைச் குழப்பி மீன்பிடிக்க முயன்று ஓரளவு வெற்றியுங் கண்ட அந்நிய சக்திகட்கும் பெரிய பங்குள்ளது. அதே சக்திகள், இன்று, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வு ஒன்றை ஆதரிப்பதாகப் பேசிக் கொண்டு, தாங்கள் விரும்புகிற ஒரு `சமாதானம்' தவிர்ந்த வேறெந்தச் சமாதானமும் ஏற்படாதபடி கவனித்துக் கொள்ளுகின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப் புலிகளிடையே பிளவை ஏற்படுத்தியதில் யூ.என்.பி. பிரமுகரான மிலிந்த மொறகொடவுக்கு ஒரு முக்கிய பங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அமெரிக்க விசுவாசம் பற்றி எவருக்கும் ஐயம் வேண்டியதில்லை. அவர் கையில் ஒரு அமெரிக்கக் கடவுச் சீட்டு உள்ளது. விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தித் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதும் முறியடிப்பதும் யூ.என்.பி.யின் பேரினவாத அரசியலின் தேவை மட்டுமல்ல, அது யூ.என்.பி. யின் நேரடியான எசமானனான அமெரிக்காவின் தேவையுங்கூட. அமெரிக்காவுக்கு விசுவாசமான யூ.என்.பி. அதிகாரத்துக்கு வருவதற்காக சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அமெரிக்கா கடுமையாக முயன்றது. அதன் கணக்குப் பிழையாகி விட்டது. எனவே தமிழர்கள் மீது அமெரிக்காவின் அதிகார வர்க்கத்திற்கு கொஞ்சம் கடுப்புக் கூடியுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ எந்த வகையிலும் அமெரிக்காவுக்கு எதிராக எதையுமே செய்யக் கூடிய ஒருவராக இருக்கமாட்டார். இந்தியாவின் தயவை அவர் அதிகம் நாடினாலும் அமெரிக்காவுக்கு அது மிரட்சியை ஏற்படுத்துமளவுக்கு போக அவர் துணியமாட்டார். அதேவேளை, இந்தியாவுக்குள்ளேயும் அமெரிக்க சார்புச் சித்தனையுடைய ஒரு பிரிவினரது ஆதிக்கம் வலுவாகவே உள்ளதனால், அமெரிக்க நெருக்குவாரங்களினின்று அவர் தப்புவது இலகுவானதல்ல. அவரது பாதுகாப்பு ஆலோசகரான அவரது சகோதரருக்கும் அமெரிக்கக் கடவுச் சீட்டு இருப்பது, `மஹிந்த சிந்தனைக்குள்' வேறு இரகசியமான சிந்தனைகளும் அடங்கி இருப்பதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

எனவேதான், தமிழ் மக்கள் சென்ற ஜனாதிபதி தேர்தலின் போது மிகவும் தெளிவான, சரியான நிதானமான ஒரு முடிவை எடுத்தனர் என்று மீண்டும் கூறுகிறேன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு போர் அபாயச் சூழல் ஏற்பட்டிராது என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான போர் நிறுத்தத்திற்கும் அமைதிப் பேச்சுக்கும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் ஆயத்தமாகவிருந்தார் என்பதைச், சொற்களை வைத்து மதிப்பிடுவதைவிடச், செயல்களையும், அதைவிட முக்கியமாகச் செயலின்மையையும் வைத்து மதிப்பிடுவது மதியூகமானது. ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரம் போயிருந்தால், அமெரிக்கா மூலம் தமிழ் மக்கள் மீது கடுமையான நெருக்குவாரங்கள் செலுத்தப்பட்டிருக்கும். அதன் விளைவுகள் நம்மை எங்கே போய்ச் சேர்த்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலக மேலாதிக்கவாதிகள் போரை விரும்பினாலும் அமைதியை விரும்பினாலும், அது மக்களின் நன்மை தொடர்பான ஒரு தெரிவல்ல. அவர்கள் தமது நாட்டு மக்களைப் பற்றியும் அக்கறையற்றவர்கள் என்பதை அண்மைக்கால இயற்கைச் சீற்றங்களின் பின்பு நாம் கண்டுள்ளோம். எனவே, நாம் அந்நிய வல்லரசுகளது ஆதரவு, நல்லெண்ணம், தலையீடு என்பன பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா இலங்கையில் தமிழ் மக்கள் சார்பாக குறுக்கிட வேண்டும் என்று மலையகத் தலைவர் ஒருவர் அண்மையில் வை. கோபாலசாமியிடம் கேட்டுக் கொண்டார். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள் அரசியல் தலைவர்கள் சுரனை கெட்டிருக்கலாம். என்றாலும் தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறது அதற்கு அப்பால் போகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவது பற்றியும் உலக நாடுகளின் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாகவே போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுகிறது. மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கையில் எழுதப்பட்டவை மீறப்படுவது பற்றியே பலரது கவலைகள் உள்ளன. அண்மைக் கால வன்முறைகட்குப் பலியான வர்களிற் பெரும்பாலானவர்கள் ஆயுதப் படையினரோ விடுதலைப் புலிகளின் போராளிளோ அல்லர்.

உரிமை கோரப்படாத, சட்டவிரோதமான, முற்றிலும் நியாயமற்ற வன்செயல்கள் இன்று தமிழ்ச் சமூகத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவற்றைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜனாதிபதிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதைவிடக் கவலை தரக்கூடிய விதமாக அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அக்கறைகூட அவரிடம் இல்லையே என்ற ஐயம் என்னிடம் தோன்றியுள்ளது. பொதுமக்கள் மீது ஆயுதப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் பலியானதற்கு ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சில வாரங்கள் முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்தவை பற்றியும் விசாரணை நடத்தப்போவதாக ஜனாதிபதி சொன்னார்.

என்னுடைய அனுபவத்தில் எதையும் செய்யாமல் பின் போடுவதற்கு மிக வசதியான வழி, ஒரு குழுவை நியமிப்பதுதான் .ஒரு குழுவின் அளவு பெரிதாகிக் கொண்டு போனால், அதன் செயல் திறன் அதைவிட வேகமாக வீழ்ச்சியடையும். ஒரு விசாரணைக் குழு தட்டுத்தடுமாறி ஒரு முடிவை வந்தடைந்தால் அந்த முடிவை நடைமுறைப் படுத்தாமலிருக்க இன்னொரு குழுவை நியமிக்கலாம். இது ஜனாதிபதிக்குத் தெரியும். விசாரணைக் குழுக்கள் பற்றி எதையும் அறிந்த எல்லாருக்கும் தெரியும். பொதுமக்கள் மீதான வன்முறை தொடரும் என்பது பற்றியும் ஜனாதிபதிக்குத் தெரியும். அதை நிறுத்துவதற்கு அவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அவருக்குத் தெரியும். எனினும், அவற்றை எடுக்கத் தடையாக உள்ளவற்றை அவர் நீக்க ஆயத்தமாக இல்லை. நீக்க முயன்றால் ஒருவேளை அவரால் பதவியில் நிலைக்க இயலாது போகலாம். இது எல்லா ஜனாதிபதிகளதும் இக்கட்டான நிலையாக இருந்துள்ளது.

எனவேதான், போர் நிறுத்த மீறல்கள் பற்றிய குற்றாச்சாட்டுக்களைப் பரிமாறுவதைத் தவிர்த்து அரசியல் படுகொலைகளை உடனடியாகவே முடிவுக்குக் கொண்டுவரவும் அதை விட முக்கியமாகப் போருடன் நேரடித் தொடர்பற்ற பொதுமக்கள் தாக்கப்படுவதை முற்றாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை மக்கள் போராட்டத்தின் மூலமே செய்விக்க இயலும்.

போர் நிறுத்தத்தின் அதிமுக்கியமான பரிமாணம், ஆயுதந்தரித்தோரின் உயிர்களைக் காப்பதல்ல ஆயுதந் தரியாதவர்களது உயிரையும் உடைமைகளையும் காப்பதுதான்.

நன்றி: தினக்குரல்

Labels:

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

இடம்பெயர்ந்தோருக்கான மனிதாபிமான உதவிகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான மனிதாபிமான பணிக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கடந்த மார்கழி 2005 இன் முற்பகுதியில் வன்செயல்கள் அதிகரித்து காணப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள பெரும் பகுதியான மக்கள் அங்கு நடைபெறும் வன்செயல்களினால் தங்கள் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து வன்னிக்கு இடம்பெயர்நது வந்துள்ளனர்.

இத்தகைய வன்செயல்களை சிறிலங்கா இராணுவமும் அதன் கூட்டாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களுமே மேற்கொள்வதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் முறையிட்டுள்ளது. இடம்பெயரும் மக்கள் தங்களுக்கு வன்னிப் பெருநிலமே பாதுகாப்பு என நினைத்து தொடர்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். 3,325 குடும்பங்கள் (16.01.2006 வரை சுமார் 14,500 தனிநபர்களாக) தங்கள் நிரந்தர குடியிருப்புக்களை விட்டு, கையில் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தடை முகாம்களையும், நீரேரிகளையும் கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

பெருமளவில் இடம்பெயரும் மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகளிலிருந்தும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமும் அவசர நிதி உதவியை வேண்டி நிற்கின்றது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக புகலிடங்கள் அமைப்பதற்கும் உணவு, நீர், உணவல்லாத நிவாரணப் பொருட்கள், வைத்தியப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு நிதி உதவி இன்றியமையாத ஒரு அவசரத் தேவையாக இருக்கின்றது.

ஆழிப்பேரலைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு தற்போது நடைபெற்று வரும் இராணுவ அச்சுறுத்தல்களால் ஏற்பட்டுவருகின்ற இடம்பெயர்வுகளும், அதன் விளைவுகளால் துன்பப்படும் மக்களுக்கான நிவாரணப்பணிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பெரும் பொறுப்பாக உள்ளது.மக்களின் தேவைகளைப் பொறுத்த வரையில் இன்று வரைக்கும் கிடைக்கப்பெற்ற நிதி உதவியானது போதியளவு இல்லாது இருக்கின்றது.மக்களின் தேவைகளை நிறைவு செய்யமுடியாது உள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிவாரணப் பணிகளையும், ஏனைய புனர்நிர்மாண வேலைத்திட்டங்களையும் நேர்த்தியாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கு தேவையான பணியாளர்களையும், கட்டமைப்புக்களையும், துறைசார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் கொண்டுள்ளது.

ஆனால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதிப்பங்களிப்புதான் அவசரமாகத் தேவைப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச ரீதியிலான பங்காளி நிறுவனங்களும் அல்லலுறும் மக்களுக்கு மனிதாபிமான ரீதியாகத் தொடர்ந்தும் அதிகளவில் பல வழிகளிலும் குறிப்பாக நிதிப்பங்களிப்பு செய்து கைகொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இடம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் உள்ளுர் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு தாயகத்தில் தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அவல வாழ்வுகளை நன்கு எடுத்து விளக்கி அவர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றி இன்றைய அவசர தேவைகளை நிறைவேற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------
தகவல் மூலம்: புதினம்.

Labels: , ,

Saturday, January 21, 2006

மாமனிதர் ஞானரதன்

படைப்பாளர் ஞானரதனுக்கு மாமனிதர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் கெளரவம்

தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளரும், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளியும், சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளரும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தியவருமான மறைந்த ஞானரதனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி கெளரவித்தள்ளார்.



விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும், விடுதலைக்காகவும், அயராது பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து விட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலில் மூழ்கிப் போய்க்கிடக்கிறது.
ஞானதரன் அண்ணன் என அனைவரும் அன்போடு அழைக்கும் திரு.வை.சச்சிதானந்தசிவம் ஒரு நல்ல மனிதர். நெஞ்சத்தில் நேர்மையும் உள்ளத்தில் உயர்ந்த எண்ணமும் கொண்டவர். எளிமை அவரோடு கூடப்பிறந்தது. அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார். அனைவரையும் கவர்ந்து கொண்ட உயரிய பண்பாளர்.
இவர் ஒருதேச பக்தர் எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும், போராளிகளோடு இணைந்து நின்று தாய விடுதலைப் போரில் பெரும் பழுக்களைத் தாமும் சுமந்து கொண்டார்.
நீண்டகாலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களில் சுமந்து தனது முமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார் தனது அறிவாற்றலினாலும், கடும் உழைப்பாலும், தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியபணி என்றுமே பாராட்டுக்குரியது. இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி, சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளர், சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார்.
பத்திரிகைகளிலும், சஞ்சிகைளிலும் ஓய்வில்லாது எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும், தேசப்பற்றையும் தட்டி எழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைக்கு சாட்டையடி கொடுத்து எமது தேசத்தில் உண்மை நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்
எல்லாவற்றுக்கும் மேலாக இவர் எமது விடுதலை இயக்கம் ஒளிப்படத்துறையில் இன்று நிகழ்த்தியுள்ள பெரும் பாய்ச்சலுக்கு நடு நாயமாக நின்று செயற்பட்டார். நிதர்சன நிறுவனம் தோன்றிய காலம் முதல் இற்றைவரை அதன் வேராகவும், விழுதாகவும் அதனைத் தாங்கி நின்று செயற்பட்டார். எமது விடுதலைப் போராளிகளை ஒளிப்படத்துறையில் பயிற்றுவித்து அவர்களைச் சிறப்பாக வழிப்படுத்தி நெறிப்படுத்தி, ஒரு தேசிய தொலைக் காட்சியை உலகம் பூராகவும் ஒளிபரப்புகின்ற அளவுக்கு வளர்த்தெடுப்பதில் அச்சாணியாக இருந்து செயற்பட்டார்.
சிறிய குறும்படம் முதல் முழுநீளத் திரைப்படம் வரை பல்வேறு ஒளிப்பேழைகளை ஞானதரன் என்ற பேரில் தயாரித்து நெறிப்படுத்தினார். இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து எமது விடுதலை இயக்கம் களத்திலே படைத்த சாதனைகளையும், குவித்த வெற்றிகளையும் ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகைகளாகவும், விபரணங்களாகவும், தயாரித்து அவற்றை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்த உதவினார். இவர் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி அளப்பெரியது.
வை.சச்சிதானந்தசிவம் (ஞானதரன்) அவர்களின் இனப்பற்றுக்கும், விடுதலை பற்றிக்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளை கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சுய வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் நீங்காத நினைவுகளாக காலமெல்லம் நிலைத்திருப்பார்கள்.
-----------------------
இவரிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க அழைத்தபோது திரு. ஞானரதன் அவர்கள் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
-----------------------
தகவல் மூலங்கள்: சங்கதி, புதினம்.

Labels: ,

Wednesday, January 18, 2006

தாமோதரம்பிள்ளை நினைவுக்கட்டுரை.

செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்

எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.

செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.யன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.

----------------------------
மூலம்: தினக்குரல்

Labels: , ,

Wednesday, January 11, 2006

மூதூரில் தமிழ்த் தேசியப்பிரகடனம்

திருகோணமலை மூதூரில் நேற்று (10.01.2006) அன்று தமிழ்த் தேசியப் பிரகடன நிகழ்வு நடைபெற்றது. இதில் ஐம்பதாயிரத்துக்குமதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு எனப் பல இடங்களில் இவ்வாறான பிரகடனங்கள் நடைபெற்றுள்ளன.


இந்நிகழ்வில் தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனத்தை படையணி பொறுப்பாளர் பிரபாகரன் வெளியிட்டார்.

அப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனியும் யோசிக்க என்ன இருக்கின்றது. ஒன்றும் இல்லை. ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை அமைப்பதென்பது.

சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம். எத்தனை வருடங்கள் ஏமாற்றப்படுவது?

50 வருடங்களுக்கு மேலான போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடலாமா? பம்மாத்து நாடாளுமன்றத்தில் சாத்வீக போராட்டங்கள் சாதித்தது என்ன. உயிரினையும், உறவுகளையும் உடைமைகளையும் இழந்ததுதான். திட்டமிட்ட இன அழிப்பினால் இலங்கை உச்க்கட்டத்தில் நின்றதனை நாம் கண்டோம். குட்டக் குட்ட குனியும் மடையர் என நினைத்தவர்களை தட்டிக்கேட்டது எமது புதல்வர்களது கரங்களில் ஏந்திய ஆயுதங்கள் பட்டொழிந்து போவதைவிட தட்டிக் கேட்டு வெட்டிச் சரித்து சரித்திரம் படைத்த போதுதான் தட்டிக் கழிக்க முடியாது சமரசம் பேச வந்தான் எமது எதிரி.

சர்வதேமும் உற்றுப் பார்த்து உணர்ந்து கொண்டதால் விட்டுக் கொடுப்பு சமாதான தேவையுடன் சரியென வந்தனர் எமது வீரப்புதல்வர்கள், ஆனால் திட்டமிட்ட சதிகளுடன் எம் எதிரிகள் திசை மாறி சென்று விட்டனர்.

சமாதானத்தை உச்சரித்துக் கொண்டு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் யுத்தநிறுத்த மீறல்களிலும் தனது இராணுவத்தை ஈடுபடுத்திக் கொண்டும் சர்வதேத்தை ஏமாற்றிக் கொண்டும் இருக்கின்றனர்.

சர்வதேம் எங்கும் எம் வீரப்புதல்வர்களின் பலம் உணர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் வெறிபிடித்த சிறிலங்கா இராணுவத்தினதும் அரசினதும் பேரின வெறி பெரிதாக தொடரவே செய்கின்றது.

அரிய தியாகத்தினால் எமது மண் அகிலம் வியக்கத்தக்க வகையில் தலை நிமிர்ந்துள்ளது. எமது படை சகல மக்களின் வாழ்வுக்காக, சமாதானத்துக்காக தலைசாய்த்து நிற்கிறது. எமது வீரப் போரின் கரங்களாகிய மக்கள் தாம் எதிர்பார்த்தது பொய்த்து விடக்கூடாது என்ற நினைப்புடன் எமக்காய் தியாகத் தீயில் உயிரிழந்த எம் புதல்வர்களின் கனவுகள் சமாதான சதி வலையில் சிக்கிச் சாவதை இன்னும் அனுமதிப்பதா? என்று குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

எமது வீர வரலாறும் போர்க்கள வீச்சும், அகிலம் அறியும்.

அந்த அர்ப்பணிப்புக்கள் கற்பனைக் கதையல்ல, நாம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களின் உன்னதப் போரும் உலகம் வியக்கும் அரசியல் போக்கும் அறிந்த நாம் இனியும் பேரினவாதிகளுடன் பேரம் பேசுவதா?

போர் தவிர்த்து சமாதானம் பேசுவது வீண் என்று விளங்கவில்லையா?,

தமிழீழ தமிழர் நாம் விடுதலைப் புலிகள் என யார் அறிவார்.

தமிழ் மக்கள் அனைவரும் புலிகளே. தமிழீழ தமிழர்களின் உலகப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன், இன்று நாம் அவர் ஆணைக்காக காத்திருக்கும் நிலை. பொறுமைக்கும் எல்லையுண்டு. காத்திருக்கின்றோம் தலைவர் சொல்லை.

இனியும் நாம் சர்வதேசத்துக்கு மதிப்பளித்து நாம் உயர்வானவர்கள் என்பதை அவர்கள் எமது பிரச்சினையில் ஈடுபட்டு நீதியான தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவர்களின் மனிதாபிமான கடமை.

அதில் சர்வதேசம் தவறும் நிலையில் நாம் எதுவித அச்சமும் இன்றி எமது தலைவனின் பின்னால் அணி திரள்வோம்.

மக்கள் படையணி போரிடும் போதிலே எமது இருப்பையும் வாழ்வையும் எமது வாழ்வுக்கான மண்ணையும் காப்போம்.

இருப்பினும் இழப்போ, இறப்போ என்ன யோசிக்க இருக்கின்றது. ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுதான் இறுதி முடிவு. அதுதான் மக்கள் படையணி.

புலிப்படை மண் காக்கும், மானம் காக்கும், வாழ்வு அமைக்கும். தமிழீழம் காணும், தரணி எங்கும் போற்றும்!

சர்வதேசமே, சர்வதேச மக்களே, சிறிலங்கா அரசே! யுத்தமின்றி சாத்வீகமான முறையில் கௌரவமான தீர்வுக்கே இன்றுவரை இந்த நிமிடம் வரை காத்திருக்கிறோம்.

எமது உள்ளத் துடிப்பையும் உணர்வையும் புரிந்து கொண்டு எமக்குரிய தீர்வினை தரத் தவறினால் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தேசிய தலைவனின் வழியிலே வழிகாட்டலிலே எமது தீர்வினை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டோமென உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

மரபு வழித்தாயகம், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, எமது இறையாண்மைக்கான போராட்டம் என்பனவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது போராட்டத்தையும் அங்கீகரிக்குமாறு சமாதானத்தை விரும்புகின்ற அனைத்து சர்வதேசத்தையும், சர்வதேச நாடுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் பின்பும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தலைவன் கூறியது போல் தரப்பட்ட காலஅவகாம் முடிவடைகின்றது. எனவே விடுதலைப் போரை எங்கள் காவலன் சுட்டும் காலத்தில் நாமும் இணைந்து முன்னெடுக்க தயார். எங்களை வாழ விடுங்கள் இல்லையேல் எமது வழியில் விடுங்கள் என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------



முன்னதாக பொதுச்சுடரினை வீரவேங்கை சிவாஜினி, லெப்டினன்ட் தானந்தா ஆகியோரின் பெற்றோர்களான தியாகராஜபிள்ளை, அருளானந்தம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியினை வீரவேங்கை மேஜர் தமிழ்மாறன், துணைப்படை வீரர் குப்பியன் ஆகியோரின் தந்தையாரான சந்தகுட்டி அரசரெட்ணம் ஏற்றி வைத்தார்.

ஈகச்சுடரினை கரும்புலி மேஜர் ஜெயத்தின் தாயார் குணநாயகம் நாகேஸ்வரி ஏற்றி வைத்தார்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன், தளபதி மருதம், தலைமைச் செயலக பொறுப்பாளர் புதியவன், மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் காருண்யா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூதூர் கிழக்கு மற்றும் மூதூர் தெற்கு பிரதேசங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


மேலதிகப் படங்களைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்

நன்றி: சங்கதி, புதினம்

Labels: , , ,

ஜே.வி.பி கட்சியும் அதன் தலைமையும்.

வெளிவந்த சில உண்மைகள்.

"கட்சியின் தங்கத்தையும்பணத்தையும் திருடிமோசடியில் ஈடுபட்ட சோமவன்ஸவுக்கு மரணதண்டனை விதித்தது ஜே.வி.பி"


ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ நிதியையும், அந்த அமைப்பினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் மோசடி செய்து, தனது குடும்பத்தவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கினார் என்பதால் ஜே.வி.பியின் அதியுயர் பீடம் சோமவன்ஸ அமரசிங்கவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது என 'வன்முறைகளற்ற பாதையில் ஜே.வி.பி.' என்ற அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ திடுக்கிடும் தகவல்களை இப்போது வெளியிடுகின்றார்.

சுடர் ஒளி'க்கு அளித்த விசேட பேட்டி ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவை அவரது றொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் இருந்து கடத்துவதற்குத் திட்டமிட்டவரும் இதே சோமவன்ஸதான். மருதானையில் உள்ள வீடு ஒன்றில் கூடி ஐவர் கொண்ட குழுவை அமைத்து 1971 ஏப்ரல் 5ஆம் திகதி சிறிமாவைக் கடத்த அவர் திட்டமிட்டார். ஆனால், அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இல்லையேல் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கவை கொலை செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோவை இவர்கள் கொலை செய்திருப்பார்கள்'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ பழைய விடயங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார்."



"ஜே.வி.பியினரின் மரண தண்டனைக்குப் பயந்து, அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரமிக்க ஒருவராக இருந்த சிறிசேன கூரேயிடம் தஞ்சம் அடைந்தார் சோமவன்ஸ அமரசிங்க. அவருடைய உதவியின் மூலம் கள்ளத்தோணியில் இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்."
"அந்தச் சமயத்தில் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பியதற்காக அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ மீது கடுப்பாக இருந்தது இந்தியா. அந்தச் சூழ்நிலையை வசமாக வகையாக பயன்படுத்திக் கொண்டார் சோமவன்ஸ.

இந்தியாவில் "றோ' இவருக்கு சகல பாதுகாப்பையும் வழங்கியதுடன் லண்டன் செல்லவும் உதவியது.'' என்றும் டாக்டர் பெர்னாண்டோ சுட்டிக் காட்டினார். சோமவன்ஸ தலைவரான கதை"

உண்மையான ஜே.வி.பி.க்குத் துரோகம் இழைத்தவராகக் கூறப்படும் சோமவன்ஸ அமரசிங்க எப்படிப் பின்னர் கட்சிக்கே தலைவரானார்?'' என்று டாக்டர் பெர்னாண்டோவிடம் கேட்டோம்."

இது நியாயமான கேள்விதான். சோமவன்ஸ அமரசிங்க நான்கு ஐந்து தடவைக்குக்கு மேல் கூட ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை நேரடியாகச் சந்தித்தவரல்லர். பிரதான தலைவர்கள் கொல்லப்பட்டபின் பணத்தையும், தங்கத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிய சோமவன்ஸ சிறிது காலம் சென்ற பின்னர் தன்னைத்தானே தலைவராக மகுடம் சூட்டிக் கொண்டார். அதுதான் உண்மை'' எனத்தெளிவுபடுத்தினார் பெர்னாண்டோ.

ஜே.வி.பியுடன் தொடர்பு
தொழில் ரீதியாக நீங்கள் ஒரு டாக்டர் உங்களுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கும் எப்படி உறவேற்பட்டது?
என்று கேட்டோம்.

"எனது சகோதரர் எச்.எஸ்.பெர்னாண்டோ அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். எனது சகோதரும், ரோஹண விஜேவீரவும் நண்பர்கள்."
"1965ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரி விடுதிக்கு ரோஹண விஜேவீரவை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார் எனது சகோதரர்."
"வைத்தியபீட மாணவர் விடுதியில் இருந்தே ரோஹண விஜேவீர தனது ஜே.வி.பி. இயக்கம் தொடர்பான பாட விதானங்களைத் தாயாரித்தார். மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பழகுவார்."


"படித்தால் மட்டும் போதாது. படிப்போடு அரசியலிலும் ஈடுபடவேண்டும். அரசியலில் இளைஞர்கள் ஈடுபடாவிட்டால் முதலாளித்துவ வாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற முடியாது என உபதேசம் செய்வார். அவருடைய பேச்சும் போக்கும் மாணவர்களாகிய எங்களை அவர் பால் ஈர்த்தன."
"நான் வைத்தியபீட ஜே.வி.பி. மாணவர் அணியின் தலைவரானேன். அதேபோன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரிவுத் தலைவர்களாக முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர, எம்.ஏ.மெண்டிஸ், ஈரிய கொல ஆகியோர் முன்நின்று செயற்பட்டனர். ஆரம்பம் முதலே எங்களுடைய தொடர்பு இறுக்கமானதாக இருந்தது. இப்படித்தான் எங்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டன''
உணர்ச்சிகரமாக தனது இளமைக் கால நினைவுகள் மலர விவரிக்கின்றார் டாக்டர்.

சுபாஷ் சந்திரா பெர்னாண்டோ என்பது உங்களுடைய இயற் பெயரா? அல்லது இயக்கப் பெயரா?
இது எமது கேள்வி.

"அது என்னுடைய இயற் பெயர்தான். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் இறந்த செய்தியை இந்திய வானொலி அறிவித்த தினத்திலேயே நான் பிறந்துள்ளேன். சுதந்திர வெறியுடையவரான எனது தந்தை அப்போதே சுபாஷ் சந்திர பெர்னாண்டோ என்று எனக்குப் பெயர் வைத்துள்ளார்.''
சிறுபுன்னகையுடன் டாக்டரிடமிருந்து பதில் வருகிறது.

டாக்டராகப் பணிபுரிந்த உங்களை எப்போது பொலிஸார் கைது செய்தனர்?'

1970ஆம் ஆண்டு இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பிரதேசத்திலுள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலை உரிமையாளரான டாக்டர் ஒருவர் (அவரின் பெயர் இப்போது ஞாபகம் இல்லை) அரசாங்க வைத்தியசாலையில் இருந்த சில அதிகாரிகளின் உதவியுடன் மருந்து வகைகளைத் திருடிக் கொண்டிருந்தார். இம்மோசடியைக் கண்டு பிடிப்பதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அன்டன் ஜயசூரியவுக்கு நான் உதவினேன். இது அந்தத் தனியார் வைத்தியருக்கு எரிச்சலை மூட்டியது. இந்தத் தனியார் டாக்டர் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த வாசுதேவ நாணயக்கார, நந்தா எல்லாவல ஆகியோரின் தேர்தல் செலவுகளுக்குப் பெருந்தொகைகளை வழங்குபவர். இவருடைய செல்வாக்கினால் வாசுதேவ நாணயக்காரவும், நந்தா எல்லாவலையும் இரகசியப் பொலிஸாருக்கு அனுப்பிய முறைப்பாட்டின் படியே இரகசியப் பொலிஸார் என்னைக் கைது செய்தனர்.'' என்றார் டாக்டர் பெர்னாண்டோ.



சாவின் விளிம்பு வரை
"இந்த விவரம் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?''
என்று கேள்வி எழுப்பினோம்.

"1971 புரட்சியின்போது வாசுதேவ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டு எங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே வாசுதேவ இந்த உண்மையை ஒப்புக்கொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்''
என்று விளக்கினார் டாக்டர் பெர்னாண்டோ.
"இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்த எமது விடுதிக்கு ரோஹண விஜேவீர அடிக்கடிவருவார். எனது அறையிலேயே ஜே.வி.பி. தொடர்பான அறிக்கைகள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. என்னுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேர் இரத்தினபுரி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். என்னை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீவைக்க முற்பட்டபோது தெய்வாதீனமாக அங்குவந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீல் வீரசிங்க என் உயிரைக் காப்பாற்றினார்''
எனத் தனக்கு நேர்ந்த திகில் அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார் டாக்டர்.

மறக்க முடியாத அனுபவம்
"உங்களுடைய சிறை அனுபவம் தொடர்பாக மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா?''

"விட்டு விட்டும், தொடர்ந்தும் நான் 17 வருடங்கள் மொத்தமாகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளேன். கொடுமையான சித்திரவதைகளையும் அனுபவித்துள்ளேன். ஆனால், இரண்டு தமிழ்ப் பெரியார்கள் எனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன். அடுத்தவர் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகராக இருந்த கந்தையா. இவர்கள் இல்லாவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்கமுடியாது''
என்றும் பெர்னாண்டோ கண்ணீர் மல்கக் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றும் ஒரு முக்கியமான விடயத்தையும் கோடிட்டுக் காட்டினார் டாக்டர் பெர்னாண்டோ.
"ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது லொக்கு அத்துல, அத்துல நிமலசிறி, ஜயசிங்க ஆகியோர் மாற்றுக் குழு ஒன்றை அமைத்து விஜேவீரவைக் கொலைசெய்யவும் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை. இவர்களுக்கு உடந்தையாக சோமவன்ஸதான் செயற்பட்டார்'' என்றும் குறிப்பிட்டார் பெர்ணான்டோ.

83 கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு
"1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு ஜே.வி.பிதான் காரணம் என்று கூறப்படுகின்றதே. இது சரிதானா?''
என்ற கேள்வியை எழுப்பினோம்.

"இது தவறு. 1983 ஜூலை மாதம் ரோஹண விஜேவீர எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் யூ.என்.பி. குண்டர்களும் , சிறில்மதியூ மற்றும் சிறிசேனகுரே ஆகியோரின் அடியாட்களும் இனக்கலவரத்தை ஏற்படுத்திவிட்டு அப்பழியை ஜே.வி.பி. மீது போடத் திட்டமிட்டுள்ளனர். நான் எனது மனைவி பிள்ளைகளுடன் தலைமறைவாகிப் போகின்றேன்; நீரும் எப்படியாவது தலைமறைவாகிவிடவும்.' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் இன்றும் என்னிடம் உள்ளது''
என்றார் பெர்ணான்டோ.

"அப்படியானால் நீங்கள் எப்படி கைதானீர்கள்?''
இது எமது சந்தேகம்.

"இனக்கலவரம் உக்கிரமாகிக்கொண்டிருக்கும்போது கம்பஹாவில் என்னிடம் சிகிச்சைபெறும் கந்தையா என்ற முதலாளி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வீதியில் கிடந்தார். அவரைக் காப்பாற்றும்படி கம்பஹா பொலிஸில் முறையிட்டேன். நீர் உமது வேலையைப் பாரும். தமிழ் நாய்கள் பற்றிக் கவலைப்படாதீர் எனக்கூறி என்னை விரட்டினர். நான் திரும்பிவரும்போது கந்தையா முதலாளியை அவரது வீட்டுக்குள் போட்டு தீவைத்துக் கொளுத்திவிட்டனர். ஆனால், மறுநாள் என்னைக் கைதுசெய்தனர். இனக்கலவரத்தைத் தூண்டி விட்டேன் எனத் தெரிவித்து நாடாளுமன்ற குண்டுவெடிப்பு உட்பட பலவற்றுடன் தொடர்புபடுத்தி, 17 குற்றாச்சாட்டுகளைச் சுமத்தி மீண்டும் என்னை சிறையில் தள்ளிவிட்டனர். ஆனால், எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. நான்கு வருடங்களின் பின் விடுதலை செய்தனர்.
"இந்தச் சந்தர்ப்பத்தில் சோமவன்ஸ அமரசிங்க, சிறிசேன குரேயிடம் தஞ்சம் புகுந்தார். தங்களுக்கு எதுவுமே தெரியாது, எல்லாவற்றிற்கும் ரோஹண விஜேவீரதான் காரணம் எனக்கூறிவிட்டார் அவர். அவர் இரகசியப் பொலிஸாரின் ஒற்றனாகச் செயற்பட்டு ஜே.வி.பி யினரை காட்டிக் கொடுத்துவந்தார். "
"ஜே.வி.பி. தலைவர் ரோஹணவிஜேவீர பண்டாரவளையிலும், உலப்பனையிலும் மாறி மாறி மறைந்து வாழ்ந்து வந்தார். இந்தத் தகவலை சோமவன்ஸவின் நண்பர்களும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களுமான ஆனந்த, ஹேரத் ஆகிய இருவரும் அவரிடம் தெரிவித்தபின், அவர்களைப் பொலிஸில் மாட்டிவிட்டு அவர்கள் மூலமாக ரோஹண விஜேவீரவின் மறைவிடத்தைப் பொலிஸாருக்கு காட்டிக் கொடுத்தார் சோமவன்ஸ. என்றாலும் தான் நல்ல பிள்ளைபோல் வெளியே காட்டிக்கொண்டார்.

"கொடுக்கப்பட்ட தகவலின்படி ரோஹண விஜேவீர உலப்பனையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு அன்றிரவே சுட்டுக்கொல்லப்பட்டார். அதேயிரவில் சோமவன்ஸ கொடுத்த தகவலின்படி ஆயிரத்திற்கும் அதிகமான ஜே.வி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.''
என்றும் டாக்டர் பெர்ணான்டோ கட்சியின் பயங்கர அனுபவங்களை எடுத்துக் கூறினார்.

ஜே.வி.பி. ஆயுதம் தூக்கிய வரலாறு
புரட்சிகர அரசியலில் ஈபட்ட ஜே.வி.பி எப்படி ஆயுதம் தூக்கியது?
என வினாவினோம்.

அது ஒரு சுவாரஸ்யமான கதை என்றபடியே அதைச் சொல்லாத் தொடங்குகின்றார் டாக்டர்.

"ரோஹண கைதுசெய்யப்பட்டு யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தென்பகுதியில் எமது இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதனால், லொக்கு அத்துல, ஆயுதத் தாக்குதலில் ஈடுபடவேண்டும் என்றார். ஆனால், தலைவரின் அனுமதியின்றி ஆயுதம் தூக்க முடியாது என்று கட்சி உறுப்பினர்கள் கூறிவிட்டனர்.

"இதன்படி லொக்கு அத்துல, ஒஸ்மன் சில்வாவின் தாயார் ஆகியோர் உட்பட ஒரு தூதுக் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று ரோஹண விஜேவீரவைச் சந்தித்து விடயத்தைக் கூறினர்.
"அன்றைய நிலையில் எம்மிடம் இருந்தவை ஒரு சில ரைபிள்களும், கட்டுத் துவக்குகளும், வெடிகுண்டுகளும் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு பலமிக்க இராணுவம், பொலிஸுடன் மோத முடியாது. எனவே,ஆயுதங்களைப் பதுக்கி வைத்துவிட்டு தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை நிறுத்தி வையுங்கள் என ரோஹண விஜேவீர தன் கைப்பட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால்,ரோஹண விஜேவீரவின் கடிதத்தை லொக்கு அத்துல மறைத்து விட்டு தலைவர் ஆயுதத் தாக்குதலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார் எனக் கூறி தாக்குதலை ஆரம்பித்தார். இதனால், எங்களுடைய ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது''
என்று டாக்டர் பெர்ணாண்டோ பதில் அளித்தார்.

இறுதியாக இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒத்த கருத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக பேசுவதன் மூலமே அதனைச் சாதிக்க முடியும், எனவும் தாம் கருதுகிறார் என டாக்டர் பெர் னாண்டோ கூறி விடை பெற்றார்.
-----------------------------
நன்றி: சுடரொளி



Labels: ,

Tuesday, January 10, 2006

இலங்கையில் இந்தியத் தூதுவராலயம்

மறுபக்கம் - கோகர்ணன்


ஒரு வியாபாரி ஒரு படகில் பயணஞ்செய்த வேளை, கடுமையான புயற்காற்று மூண்டது. படகு அலையில் தத்தளித்தது. இப்படியே போனால் படகு கவிழ்ந்து விடுமோ என்ற பயம் வியாபாரிக்கும் படகோட்டிக்கும் ஏற்பட்டது. படகோட்டி மெல்லிய குரலில் கடவுளை வேண்டிக்கொண்டான். வியாபாரிக்கு வழிபாட்டுக்கு நேரமும் இருந்ததில்லை. எதையும் கடவுளிடம் வேண்டியும் பழக்கமில்லை. படகோட்டியிடம் "என்ன வேண்டிக் கொள்கிறாய்?" என்று கேட்டான். `இந்தப் புயலிலிருந்து என்னையும் படகையும் காப்பாற்றினால் வெள்ளியால் ஒரு விளக்குச் செய்து கோவிலுக்குக் கொடுப்பேன்' என்று சொன்னதாகப் படகோட்டி சொன்னான். "என்ன நீ முழு மடையனாக இருக்கிறாய். உயிருக்கே ஆபத்தான இந்த நேரத்தில் வெள்ளி என்ன வெள்ளி, தங்கத்தால் செய்து தருகிறேன் என்று சொல்லக்கூடாதா?" என்று வியாபாரி கடிந்து கொண்டான். "வெள்ளியால் செய்து கொடுப்பதே பெரும்பாடு. தங்கத்துக்கு எங்கே போவேன்?" என்று படகோட்டி விளங்கப்படுத்தினான். "இதோபார் உனக்கு இப்போது காரியமாக வேண்டும். தங்கத்தால் செய்து தருகிறதாகச் சொல்லு. தப்பிக் கரை சேர்ந்த பிறகு வெள்ளியிலோ, பித்தளையிலோ வசதியானபடி செய்து கொடு. கொடுக்காவிட்டால்தான் என்ன?" என்று வியாபாரி சொன்னான் என்பதுதான் கதை.

படகோட்டி என்ன செய்தான் என்றோ இருவரும் உயிர் தப்பினார்களா என்றோ எனக்குத் தெரியாது. யாராவது ஒருவர் தப்பியிராவிட்டால் கதை நமக்குத் தெரிய வந்திராதல்லவா?. அது போகட்டும்.

நம்முடைய சனாதிபதிக்கும், நம்முடைய வியாபாரி படகோட்டிக்கு ஆலோசனை சொன்னது போல தேர்தலுக்கு முன்னம் யாராவது ஆலோசனை சொன்னார்களோ தெரியாது. சொல்லியோ சொல்லாமலோ ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அதற்கும் மேலாக, ஜே.வி.பி.யிடமும் ஹெல உறுமயவிடமும் பல நேர்த்திக் கடன்களையும் வைத்துக் கொண்டார். இப்பொழுது காப்பாற்றுகிற ஒவ்வொரு வாக்குறுதிக்கும் நூறு வாக்குறுதிகளுக்குக் கையை விரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்காக இரக்கப்படுவதாவென்று தெரியவில்லை.

என்றாலும் கடவுள் கூடக் காட்டாதளவு சகிப்புத்தன்மையை ஜே.வி.பி. ராஜபக்‌ஷவுக்குக் காட்டுகிறது என நினைக்கிறேன். அவர்கள் கொஞ்சம் முணுமுணுக்காமல் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு அரசாங்கம் கவிழாமல் கவனித்துக் கொள்கிற ஒரு தேவை இருக்கிறது. முந்நூற்றைம்பது ரூபாவுக்கு ஒருமூடை உரம் வழங்குகின்ற வாக்குறுதியைச் சனாதிபதி கொள்கையளவிலாவது நிறைவேற்றியதால் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியைப் பெற்று அதன் பின்னால் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பிடிக்கலாம் என்ற யோசனையில் ஆளுங்கட்சியும் கூட்டாளியான ஜே.வி.பி.யும் உள்ளதாலேயே அவர்களிடையில் இன்னமும் ஒரு சமாதான உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன்.

இல்லாவிட்டால், எல்லாரையும் அமைச்சராக்கி எல்லாருக்கும் எல்லாச் சொகுசுகளையும் வழங்க உடன்பட்ட ஜனாதிபதியை இவ்வளவு தூரம் விட்டு வைத்திருப்பார்களா?

நோர்வேயைச் சமாதான முயற்சிகளிலிருந்து விலக்குவதாகச் சொல்லி விட்டு இப்போது நோர்வே விதித்த நிபந்தனைகற்கேற்பவே நோர்வேயின் பங்குபற்றல் அமையும் என்கிற நிலைமைபற்றிப் பேசாமல் இருப்பார்களா?

ஜே.வி.பி.யையும் வேறு சில தீவிரவாதிகளையும் மகிழ்விக்க மகிந்த ராஜபக்‌ஷ எடுத்த முயற்சிகள் நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தான் என் ஊகம்.

ஆறுமுகன் தொண்டமானையோ சந்திரசேகரனையோ ரவூப் ஹக்கீமையோ அணுகவிடாதது என் கருத்தில் மெச்சத்தக்க ஒரு விடயம். வேறு ஒட்டுண்ணிகளையும் அவர் பதவிகளிலிருந்து கழற்றி விட்டிருந்தால் இன்னுஞ் சிறப்பாயிருந்திருக்கும். எனினும், அவர் எடுத்த முடிவுகள் சரி பிழைகளின் அடிப்படையில் இல்லாமல் பாராளுமன்ற அதிகாரச் சமன்பாடுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன என்பது தான் அவருக்குப் பிரச்சினையாகப் போகிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ இ.தொ.கா.வைப் பிளவுபடுத்துகிற வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் என்பதில் உள்ள உண்மையைவிட, ஆறுமுகன் தொண்டான் இ.தொ.கா.வைப் பலவீனப்படுத்தியிருக்கிறார் என்பதில் உண்மை அதிகம். பதவிக்காகவும் வசதிக்காகவும் சலுகைகற்காகவும் கட்சி தாவுவதில் இ.தொ.கா. தலைமையில் எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் தாம். அண்மையில் ஆளுக்காள் ஊழல் குற்றஞ்சாட்டியதைவிட மோசமாக எவரும் அவர்கள்மீது குற்றஞ்சுமத்தியதில்லை. இது இ.தொ.கா.வின் அவலம்.

இ.தொ.கா. தலைவர் விடுதலைப் புலிகளிடம் பேசப் போனதன் மூலம் அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல் முடிந்த பின்பு தூதரகத்துக்கும் இந்தியாவுக்கும் போய் வந்தும், அவர் நினைத்தது கிடைக்கவில்லை. அதுவும் போதாமல் அவரை ஒரு பொருட்டாகவே ஜனாதிபதி கருதவில்லையென்பதுதான் அவரது ஆதங்கம். இந்தியாவின் தரகு வேலை எடுபடாததும் ஒரு கவலை.

இந்திய உயர்ஸ்தானிகரின் ராஜதந்திர மதிநுட்பம் பற்றிய ஐயங்களை எழுப்புகிற விதமாகவே அவர் அண்மையில் நடந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஒரு தூதரகத்தின் பணி ஒருநாட்டின் உள்அலுவல்களில் குறுக்கிடுவதல்ல. சில தூதரங்கள் இந்த விதியைக் கடைப்பிடிப்பதில்லை. நம் விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் மிகப் பெரிய குற்றவாளிகள். இந்தியத் தூதரகம் தனது குறுக்கீட்டை மிகவும் அப்பட்டமாகவே பல காலமாகச் செய்து வருகிறது. எனவே, இது ஒரு குறிப்பிட்ட உயர்ஸ்தானிகரது பிழையென்று கூற முடியாது.

என்றாலும், வன்னிக்குப் பிந்திய ஆறுமுகன் தொண்டமானுடனான சந்திப்பின் பின்பு, ஜனாதிபதியை இந்தியத் தூதரகத்துக்கு வருமாறு அழைத்திருக்கிறார். தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காட்டவோ, தேநீர் விருந்துக்கோ அழைத்தாரென நான் நம்பவில்லை. அதற்கான இடம், அவரது வதிவிடமாக இருப்பது கூடப் பொருத்தமாயிருந்திருக்கும். அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆறுமுகன் தொண்டமான் விடயமாகப் பேசினார்களா என்பது கூட முக்கியமானதல்ல.

ஒரு தூதர் தன்னுடைய அலுவலகத்துக்கோ இருப்பிடத்துக்கோ யாரை என்ன அடிப்படையில் அழைப்பது என்பதற்கான சில நடைமுறைகளும் எழுதிய விதிகளும் உள்ளன. இப்போது அவை மீறப்பட்டுள்ளன. அதனால் இந்த நாட்டின் சனாதிபதி அவமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த அழைப்பை ஏற்றதன் மூலம் சனாதிபதி தன்னை மட்டுமன்றி இந்த நாட்டின் இறைமையையும் அவமதிக்க உடன்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்க ஒரு மீறல்.

இந்த நாட்டின் எழுதப்பட்ட வரலாற்றில் இங்கு அனுப்பப்பட்ட முதலாவது அயல் அரச தூதுவர் ஒரு சமயத் தூதுவராக இருந்தார். அந்தத் தூதின் அரசியல் பரிமாணங்களைவிட புத்த மதப் பரப்புதலுக்கு வரலாற்றாசிரியர்கள் கூடிய முக்கியம் வழங்கியுள்ளனர். எப்படியோ அது இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. புத்த சமயத்தின் வருகையை இந்த நாடு எவ்வளவு நல்ல விதமாகப் பயன்படுத்தியதென்பது இன்னொரு விடயம்.

இராமாயணத்தை தாங்கள் நம்புவதென்றால் அந்த இராமாயண இலங்கை இந்த நாடாக இருந்தால் இங்கு அனுப்பப்பட்ட முதலாவது தூதன் வாலில் கட்டிய நெருப்பைக் கொண்டு முழு நாட்டையுமே தீயிலிட்டது தான் முதலாவது இலங்கை இந்திய இராஜதந்திர அனுபவம். அது அவ்வளவு இனிய அனுபவமாயிருந்திருக்காது.

அனுமனுடைய குரங்குத்தனமும் ராமனுடைய அதிகாரத்தின் பிரதிநிதி என்ற திமிரும்தான் இந்தியத் தூதர்கள் பின்பற்றுகிற இராஜதந்திர நடைமுறையா என்று நம்மைக் கேட்கத் தூண்டுகிற விதமாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடந்துகொள்ளக் கூடாது என்று கேட்க நமக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றையும்விட, இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்பதில் இந்திய அரசாங்க வற்புறுத்தல்கள் நிறுத்தப்படுவது முக்கியமானது. இந்தியாவில் உள்ளதுபோல `சமஷ்டி' இந்தியாவின் தேசிய இனப்பிரச்சினைக்குப் போதுமானதாயிருக்கலாம். ஆனாலும், அதன் போதாமைகள் காலப்போக்கிற் புலனாகி வருகின்றன. இலங்கை இன்னொரு நாடு. அதன் தேசிய இனப்பிரச்சினையின் வரலாறு இந்தியாவின் தேசிய இனப் பிரச்சினை வரலாற்றின் எப்பகுதியின்றும் வேறுபட்டது. எனவே, இலங்கைக்கு ஏற்றது எது என்பதைச் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களே முடிவு செய்யட்டும். எதை அனுமதிப்பது எதை அனுமதிப்பதில்லை என்று இந்தியா சொல்வதற்கும் அமெரிக்கா கியூபா பற்றியும் பின்புலத்தின் அமெரிக்க நாடுகள் பற்றியும் கட்டளைவிடுவதற்கும் அதிக வேறுபாடில்லை.

அனைத்திலும் முக்கியமாக இந்தியாவினதோ அமெரிக்காவினதோ ஆணைகளைக் கேட்க வேண்டிய நிலையில் இந்தநாட்டைத் தொடர விடாதிருப்பது ஜனாதிபதியின் தலையாய கடமை.
-----------------------------
நன்றி: தினக்குரல்

Labels:

Friday, January 06, 2006

பெண் புலிகள் பற்றி றொய்ட்டர்

றொய்ட்டர் செய்தி தாபனம் கிளிநொச்சியில் போராளிகள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடி செய்தித்தொகுப்பொன்று வெளியிட்டுள்ளது.
தொகுப்பு: Peter Apps
அதன் சுட்டி இங்கே.

Labels: ,

வை.கோ. ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.

29.12.2005 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற் கலந்துகொண்டு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் வை.கோ. அவர்கள் ஆற்றிய உரை.

பாகம் ஒன்று
பாகம் இரண்டு.
--------------------------------------------

நன்றி தமிழ்நாதம்.

Labels: , ,

Thursday, January 05, 2006

தந்தை பார்த்திருக்க மகனைக்கொன்றனர் படையினர்.

திருமலைச்சம்பவத்தில் நடந்ததென்ன?

சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்த மாணவர் ஒருவரின் தந்தை முன்னே 5 அப்பாவி மாணவர்களையும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

"அவசரகால சட்டத்தைப்பயன்படுத்தி அரச படைகளும் பேரினவாதக் காடையர்களும் கூட்டுச் சேர்ந்து நடத்திய சதியே ஐந்து மாணவர்களின் படுகொலையாகும்.
இத்தகைய படுகொலைச் சம்பவங்கள் அரச படைகளால் மேற்கொள்ளப்படும் என்று அச்சம் தெரிவித்திருந்தோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் தராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மீண்டும் மீண்டும் எமது மண்ணில் இராணுவத்தைக் கொண்டு வந்து குவித்ததோடு மட்டுமன்றி அவரகாலச் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கணக்கிலெடுக்காது சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் சோதனை நடவடிக்கைகளையும் அனாமதேய கைதுகளையும் நடத்திக் கொண்டுள்ளனர்.

"இச்சம்பவம் நடைபெற்றபொழுது சம்பவ இடத்திலிருந்து ஐம்பது மீற்றருக்கு உட்பட்ட தூரத்தில் சிறிலங்கா கடற்படையினது நான்கு சோதனைச் சாவடிகளும் இருந்துள்ளன.
அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அக்கு வேறு ஆணி வேறாக கழற்றப்பட்டு சோதனை செய்யப்படுகிற நிலையில் ஓட்டோவில் வந்து கைக்குண்டை வீசிவிட்டு எப்படித் தப்பிச் செல்ல முடிந்தது? என்பதை சிறிலங்கா அராங்கம் சர்வதேத்திற்குச் சொல்ல வேண்டும்.

"அது மட்டுமின்றி 07.30 மணிக்கு கைக்குண்டு வீசப்பட்ட பின்பு கைது செய்யப்பட்ட அப்பாவி ஐந்து மாணவர்களும் ஒருவரது தந்தையின் கண் முன்னாலேயே 07.44 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

"07.30 மணிக்கு கைது செய்யப்பட்ட மாணவன் தனது தந்தைக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் தான் கைது செய்யப்பட்ட விடயத்தைத் தெரிவித்து உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன் பின்பே அந்த மாணவரின் தந்தையார் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார். சென்றவரை அவ்விடத்திற்குச் செல்லவிடாது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த போதுதான் அவர் கண் முன்னாலேயே இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

"எனவே உண்மை இப்படியிருக்க அரச ஊடகங்களும் சிறிலங்கா படைகளும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி அப்பாவி ஐந்து மாணவர்களுக்கும் புலிச்சாயம் பூசியுள்ளனர்.

"1983, 1984, 1988 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எவ்வாறு திருகோணமலை மண்ணில் அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டு சிறிலங்காவினது கடற்படை திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டதோ அதே அட்டூழிங்கள் அதே பாணியில் மீண்டும் அதே கடற்படையினரால் 2006 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டுள்ளது."

என்றுகூறும் அவ்வறிக்கை தொடர்ந்து செல்கிறது.
-------------------------------------
செய்தி: புதினம்.
-------------------------------------

அச்சம்பவத்தில் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோட முயற்சித்து, சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரு மாணவர்களின் வாக்குமூலங்களும் என்ன நடந்ததென்று தெளிவாகச் சொல்கின்றன. அவர்களினதும், கொல்லப்பட்ட மாணவனின் தகப்பனினதும், இன்னும் அப்பகுதி மக்களினதும் கருத்துக்களையும் வாக்குமூலங்களையும் புறந்தள்ளி, மறைத்து, இருட்டடிப்புச் செய்கின்றன பெரும்பாலான ஊடகங்கள். அதைவிட கொல்லப்பட்டவர்களைப் புலிகளாக்கிவிட்டன சில ஊடகங்கள். கொல்லப்பட்டவர்கள் புலிகள்தானென்று ஒப்புக்கொண்டால்தான் உடல்களைத் தரப்படுமென்று கட்டாயப்படுத்தல்கள் வேறு.

Labels: , ,

Tuesday, January 03, 2006

வீரமணி, வை.கோவின் உரைகள் ஒலிவடிவம்

29.12.05 அன்று பெரியார் திடலில் நடந்த ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.
--------------------------------------------

19.12.05 அன்று நூல்வெளியீட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகச் செயலர் வை.கோ. அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.
பாகம் ஒன்று
பாகம் இரண்டு.

--------------------------------------------

நன்றி: தமிழ்நாதம்.

Labels: , ,


Get your own calendar

Links