« Home | அமெரிக்க அரசியலும் சதாமும் » | இந்தியா பிச்சை போடுமா? » | அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா? » | லெப்.கேணல் அக்பர் » | மலையக மக்களின் போராட்டம் » | சனநாயகமும் பயங்கரவாதமும் » | சிங்கள மனப்பான்மையும் சிறிலங்கா நிலைமையும் » | ஏழுகட்சிக்கூட்டணி - மாவோயிசப் போராளிகள் ஒப்பந்தம் » | இஸ்ரேலியப் பயங்கரவாதம் - சனநாயகத்துக்கான போராட்டம் » | இராணுவப்பிடியில் சிறிலங்கா »

பகிரப்படாத பக்கங்கள். 1.

மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்து பார்த்தான். கண்ணெதிரே கம்பியில் குருதிப்பை தொங்கிக்கொண்டிருந்தது. கையில் குருதி ஏற்றப்பட்டிருந்தது. மருந்துமணம் மூக்கைத் துளைத்தது. மெல்லக் கால்களை அசைக்க முயன்றான், முடியவில்லை. உணர்வற்று உயிரற்ற சடமாய் கால்கள் மரத்துப்போய்க் கிடந்தன. முதுகு விண் விண்ணென வலித்தது.

நினைவுகளை மீட்டுப்பார்த்தான். இராணுவ ஆக்கிரமிப்புக்கெதிரான முறியடிப்புச் சமரில் விழுப் புண்ணடைந்ததை உணர்ந்து கொண்டான். அவனது கரங்கள் கனரகத் துப்பாக்கியை இயக்கிக் கொண்டிருந்தபோது, ராங்கியொன்று அவர்களின் நிலையைத் தாக்கியது. அவனுக்கு வயிற்றுப் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. கால்கள் நிற்கமுடியாமல் சோர்ந்து துவண்டன. குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. எதிரே இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தனர். துப்பாக்கியைத் தோழனிடம் கொடுத்தான். தோழன் சிதைந்த காவல்நிலையை விட்டு மற்றைய நிலைக்கு மாறி இராணுவத்தை முன்னேற விடாமல் கனரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தான்.

ராங்கிகளின் உறுமல் அவனுக்கருகில் கேட்டது. கால்களை தடவிப் பார்த்தான். குளிர்ந்துபோயிருந்தன. இராணுவத்தினரிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என எண்ணியவன் சயனைற் குப்பியை வாய்க்குள் வைத்தான். அங்குவந்த மருத்துவப் போராளி சயனைற் குப்பியைப் பறித்துவிட்டு வயிற்றுக் காயத்துக்குக் கட்டுப்போட்டான். களமருத்துவத்தை வெற்றிகரமாய் நிறைவேற்றி காவு குழுவிடம் அவனை ஒப்படைத்தான்.

அவனுக்குக் கண்கள் இருண்டன. அப்போது மயங்கியவன் இங்குத்தான் விழித்துக் கொண்டான். அன்று அந்த மருத்துவப் போராளியின் முயற்சியினால் உயிர்தப்பியதை நினைத்துப் பார்த்தான். மருத்துவ வீட்டில் இரண்டு மாதங்கள் இருக்கவேண்டியிருந்தது. காயங்கள் மாறியபோதும் கால்கள் இயங்க மறுத்துவிட்டன. மருத்துவப் போராளிகளின் அரவணைப்பு அவனுக்கு அம்மாவை ஞாபகமூட்டியது.

இரண்டு மாதங்களின் பின் முகாமுக்கு வந்துசேர்ந்தான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. தோழர்கள் முழு நிறைவாக கவனித்துக் கொண்டார்கள். அவனுடைய கால்களின் நரம்புகளைத் தூண்ட காலையும், மாலையும் பயிற்சிகள் செய்துவிட்டார்கள். எப்படியாவது மீண்டும் களத்துக்குப் போகவேண்டுமென்ற அவா அவனில் நிறைந்துபோயிருந்தது.

படிப்படியாகத் தனது பணிகளைத் தானே செய்ய முயற்சித்தான். ஆறுமாதங்களின் பின் கால்களில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். கால் விரல்களை இப்போது அவனால் அசைக்க முடிந்தது. மெலிந்து குச்சியாய் இருந்த கால்கள் மெருகேறத்தொடங்கின. அவன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சியிலீடுபட்டான். ஓராண்டின் பின் அவனால் மீண்டும் நடக்கமுடிந்தது. அவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. மீண்டும் களத்துக்குப் போவேனென சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் இன்று உயிரோடு இருக்கக் காரணமாயிருந்த மருத்துவப் போராளியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியாமையை எண்ணிக் கவலைப்பட்டான்.

அந்தப் போராளி பிறிதொரு சமரில் வீரச்சாவடைந்திருந்தான். ஒவ்வொரு மருத்துவப் போராளியும் போராளிகளின் உயிர்களைக் காப்பதற்காய் படும் பாடுகள் அவன் கண்முன்னே தோன்றின. முச்சக்கர வண்டியில் மாவீரர் துயிலுமில்லத்துக்குச் சென்று வந்தவன் இன்று கால்கள் பதித்து கல்லறை நோக்கி நடந்தான். மாவீரர் நினைவுப் பாடல்கள் காற்றில் கலந்து காதில் புகுந்து மனதை நிரப்பிக்கொண்டிருந்தன.
____________________
நன்றி: விடுதலைப் புலிகள்

Labels: , , ,

Comments


Get your own calendar

  • வன்னியன் commented:
    நாணயமானவரே,கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப...

    Anonymous commented:
    எழுதிக்கொள்வது: நாணயமானவர்//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என...

    வெற்றி commented:
    வன்னி,பதிவுக்கு மிக்க நன்றி.

    Anonymous commented:
    //1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில...

    வன்னியன் commented:
    வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

    Anonymous commented:
    வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில...

    Anonymous commented:
    நல்ல கட்டுரை.பதிந்ததற்கு நன்றி.

Links