திருகோணமலை வெறியாட்டம் -படங்கள்
திருகோணமலையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது இரண்டுநாட்களாக சிங்கள அரசபடை நடத்திவந்த தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது இதுவரை அறிவிக்கப்பபட்டுள்ளது.
மூதூர் கிழக்கில் சிங்களப்படைகள் நடத்திய வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களின் படங்களை இங்கே சென்று பார்க்கலாம்.
நன்றி: சங்கதி.
Labels: செய்தி, மக்கள் துயரம்
Tuesday, April 25, 2006
வாளைக் கைவிடாத சிங்கம்.
தினக்குரல் மறுபக்கம்.
-கோகர்ணன்-
சிங்கம் ஒரு போதும் வாளைக் கைவிடப் போவதில்லை
சமீபத்தில் திருகோணமலையில் நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்றதும் அன்றிரவே திருகோணமலையில் உள்ள எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை விசாரித்தேன். சில நிமிட தொலைபேசி உரையாடலில் அவர் கூறிய ஒரு விடயம் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. அந்த நண்பர் தனக்குத் தெரிந்த விடயங்களை விபரித்து விட்டு "சிங்கம் வாளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை" என மிகுந்த ஆதங்கத்துடன் கூறினார். 'சிங்கம் ஒருபோதும் வாளைக் கைவிடப் போவதில்லை' இக் கூற்றை அவர் ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் கூறினாரோ என்னவோ ஆனால் அக்கூற்றானது ஒரு ஒடுக்குமுறை வரலாற்றையே உட்கொண்டிருக்கின்றது. இன்றுவரை அந்த ஒடுக்குமுறை வரலாற்றுப் பாரம்பரியத்தில்தான் சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றுப்போக்கிலிருந்து சிங்கள மக்கள் எப்பொழுது விலகப்போகிறார்கள். அது குறித்துத்தான் இக்கட்டுரையில் பேசலாம் என நினைக்கிறேன்.
உண்மையில் திருகோணமலை சம்பவங்கள் என்னளவில் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதேயன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சிங்கள பெருந்தேசியவாதத்தின் வரலாற்றுப் போக்கையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்பட்ட அதன் அசிங்கமான முகங்களையும் அறிந்துகொண்டிருக்கும் எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தப்போவதில்லை. சிங்களம் பெரிதாக வெட்டி விழுத்தி விடப்போகிறதென எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேண்டுமானால் இச்சம்பவம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம். ஒரு வகையில் திருகோணமலை சம்பவங்கள், கடந்த நான்கு வருடங்களாக சிங்கள மக்கள் இனவாதப் போக்கிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர்கள் சகவாழ்வை விரும்புவதாகவும் கதையளந்து கொண்டிருந்த பலரின் முகத்திரையை கிழித்திருக்கின்றது.
ஆனால் இச்சம்பவங்கள் குறித்து ஜே.வி.பி.யினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நமது கவனத்துக்குரியது. அரசின் தவறுகள் காரணமாகவே திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்திருக்கின்றனர் என்பது ஜே.வி.பி.யின் வாதம். எனவே இங்கு சட்டம் என்பதன் அர்த்தம் நம்மைப் பொறுத்தவரையில் இவ்வாறுதானே அமைய முடியும். சிங்கள மேலாதிக்கத்தை பேணும்வகையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குதல் தேவைப்பட்டால் அழித்தொழித்தல் என்பதுதான் சிங்கள பௌத்தத்தின் சட்ட எல்லை. இந்த அரச கடப்பாட்டை மகிந்த அரசு செய்யத்தவறியதன் விளைவுதான் திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் அதனை நடைமுறைப்படுத்த வீதியில் இறங்கியிருக்கின்றனர். ஜே.வி.பி.யின் இக் கூற்றானது திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் நியாயத்தை வழங்கியிருப்பதுடன் சிங்களவர்களை மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மனோபலத்தையும் வழங்குகின்றது. ஜே.வி.பி.யினர் வெளிப்படையாகவே தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் பௌத்தவாத அமைப்பினர் என்பதால் இதனை வெளிப்படையாக அவர்களால் கூறமுடிந்திருக்கிறது.
உண்மையில் சிங்கள மக்களின் பிரச்சினைதான் என்ன? அவர்களால் தொடர்ந்தும் இனவாத அரசியலுடனும், வெறித்தனமான தமிழர் விரோதப் போக்குடனும் எவ்வாறு இணைந்திருக்க முடிகிறது? நவீன சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட இத்தகையதொரு போக்கு எவ்வாறு சிங்கள மக்களுக்குள் நிலையாகத் தொழிற்படுகிறது? ஒரு வகையில் இவைகள் சுவாரஸ்யமானதும் மறுபுறம் எரிச்சல் ஊட்டக் கூடியதுமான கேள்விகள்தான். ஆனால் என்ன செய்வது சிங்கள தேசத்தின் அரசியல் அத்தகையதொரு அடித்தளத்தில் இயங்கிவருவதால் எரிச்சலூட்டக் கூடிய இக் கேள்விகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். ஜேர்மனியிலிருந்து வந்த நண்பரொருவர் கொழும்பு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் விவாதித்தார். இன்னும் பத்துவருடங்களில் சிங்கள இனவாதம் முற்றாக அழிந்து விடும். உலகமயமாக்கல் சிங்கள இனவாதப்போக்கை விழுங்கிவிடும் என்பதுதான் அந்த நண்பர் குறிப்பிட்ட விடயம்.
இப்படியான பார்வைகள் சிலரிடம் இருப்பதை நானறிவேன். ஆனால் இவ்வாறான கற்பனவாத கருத்துக்களை நிரூபிப்பதற்கான எந்தவிதமான சான்றுகளையும் சிங்களம் விட்டு வைக்கவில்லை. உலகத்தையே கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்த பகாசுர அரசியல் சூழலிலும் சிங்கள இனவாத அரசியல் மிகவும் இறுக்கமான நிலையில் தொழிற்படுவது சிலருக்கு வியப்பைக் கொடுக்கலாம். என்னளவில் இந்நிலைமை வியப்புக்குரிய ஒன்றல்ல. எனக்கு மட்டுமல்ல சிங்கள பௌத்த இனவாதப் போக்கை புரிந்துகொண்டவர்கள் எவருக்குமே இந்நிலைமைகள் வியப்புக்குரிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. சிங்கள இனவாத அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாக உருமாறி நீண்டகாலமாகிவிட்டது.
ஆரம்பத்திலிருந்தே சிங்களத்துவ அரசியல் அடிப்படைவாதப் பண்பு நிலையிலேயே தொழிற்பட்டு வந்திருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் அது தீவிர நிலையை அடைந்துவிட்டது. தமிழீழத் தேசிய எழுச்சியும் குறிப்பாக சிறிலங்கா அரசு போரில் விடுதலைப்புலிகளிடம் படுதோல்வியடைந்ததும் இந்த தீவிர நிலையின் புறக்காரணிகளாக இருக்கின்றன. தமிழ்த் தேசிய எழுச்சிக்கு முன்னர் தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையென்ற அடிப்படையில் நிலைபெற்றிருந்த சிங்கள அடிப்படைவாதம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து சிங்கத்தின் இனமான சிங்களவர்கள் தமிழர்களிடம் தோற்றுவிட்டனர் என்னும் தோல்விவாத அரசியலின் அடிப்படையில் சிங்கள அடிப்படைவாதத்தை கட்டமைக்கின்றது. இவ் அரசியல் முன்னரைக் காட்டிலும் அதிதீவிரம் மிக்கதாகவும் சிங்கள மக்களை வெறித்தனமான தமிழர் விரோதத்தில் தக்கவைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகவும் இருக்கிறது.
எனவே இப்பொழுது இலங்கையின் இனமுரண்பாடு அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசியத்திற்கும் இடையிலான முரண்பாடாக உருமாறிவிட்டது. இந்த இடத்தில் சிலருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு இசைவாகவே நாம் ஒரு கேள்வியைக் கேட்போம். உலகமயமாக்கல் சிங்கள அடிப்படைவாதத்தை விழுங்கக் கூடிய சாத்தியமுண்டா? இன்றைய உலக அரசியல் போக்கில் உலகமயமாக்கல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மேலெழுந்திருப்பது உண்மைதான். ஆனால் மறுபுறமாக இந்த ஒற்றையொழுங்கு அரசியலுக்கு சவால்விடக்கூடிய சக்திவாய்ந்த தீவிர அரசியல்போக்காக அடிப்படைவாத அரசியல் மேலெழுந்து வருகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதமாகும். மார்க்சிய அரசியலின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒற்றையொழுங்கு அரசியல் போக்கிற்கு சவால்விடக் கூடிய மாற்று அரசியல் அற்ற நிலையிருந்தது. தற்போது அந்த இடத்தை அடிப்படைவாத அரசியல் கைப்பற்றியிருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதமானது மேற்கு எதிர்ப்பில் குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பில் மையங் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அமெரிக்க எதிர்ப்பின் மீதான தீவிரத்தைப் பொறுத்தே அமையும். ஆனால் சிங்கள பௌத்த அடிப்படைவாதமானது முற்றிலும் தமிழர் விரோதத்தில் மையங் கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிங்கள அடிப்படைவாதம் மேற்கு எதிர்ப்பினை இனங்காட்டினாலும் அதன் சாரமாக இருப்பதும் தமிழர் விரோத அரசியலேயன்றி வேறொன்றுமில்லை. நாம் ஜே.வி.பி.யின் நோர்வே எதிர்ப்பை இதற்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
இத்தகையதொரு பின்புலத்தில்தான் சாதாரண சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாதாரண சிங்களக் குடியானவனும் யோசிக்கிறான் இது எனக்கு மட்டுமே உரிய நாடு. தமிழர்கள் எனக்கு கீழாக வாழ வேண்டியவர்கள். அதனை அவர்கள் மீறும் பட்சத்தில் அவர்களை தண்டிக்கும் அழிக்கும் தார்மீகப் பொறுப்பும் கடப்பாடும் தனக்குண்டென சாதாரண சிங்கள மக்கள் தமது நம்பிக்கை உண்மையானது என நம்புகின்றனர். இதற்கான அரசியல் நியாயத்தையும் சமூக உளவியலையும்தான் நான் மேற்குறிப்பிட்ட சிங்கள பௌத்த அடிப்படைவாதம் வழங்கிவருகிறது. சிங்கள பௌத்த அடிப்படைவாதம் சிங்கள மக்கள் மத்தியில் நான்கு தரப்பாக தொழிற்படுகிறது. ஒன்று சிங்கள அடிப்படைவாதத்தை சிந்தனைச் சூழலில் தக்கவைக்கும் அதற்கான கருத்துருவாக் கங்களில் ஈடுபடும் சிங்கள புத்திஜீவிகள் ஊடகத்தரப்பினர், இரண்டு, அரசியல் மட்டத்தில் சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கத்தை தக்கவைக்கும் அரசியல் தரப்பினர். மற்றையவர்கள் அரசில் தரப்பினரது பௌத்த அடிப்படைவாதக் கட்டமைப்பிற்கு தமிழர் விரோத நிலையில் செயல் வடிவம் கொடுக்கும் சாதாரண சிங்கள மக்கள். இந்த மூன்றுபிரிவினரும் ஒருவரில் ஒருவர் தங்கியும் ஒருவரை ஒருவர் பலப்படுத்தும் வகையிலும் தமது இணைவை ஒழுங்கமைத்திருக்கின்றனர்.
சில காலகட்டங்களில் இதில் ஒன்று சற்று நெகிழ்வடையும் நிலையில் மற்றைய பிரிவுகள் நெகிழ்வை ஈடு செய்யும் வகையில் தொழிலாற்றும். இதில் சிங்கள ஆங்கில ஊடக தரப்பினரின் பங்கு எப்போதுமே நெகிழ்வற்ற முறையில் இயங்கிவருகிறது. இதன் காரணமாகத்தான் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எப்போதும் வெறித்தனமான தமிழர் விரோதம் ஆழ வேரூன்றியிருக்கிறது.
சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் விளங்குவதில்லை. அவர்கள் நமது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களது மேலாதிக்க மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்று விவாதிக்கும் ஒரு தரப்பினர் நம்மத்தியில் இருக்கின்றனர். இது குறித்து எனக்கு ஓரளவு இருந்த நம்பிக்கையும் திருகோணமலை சம்பவங்களுக்கு பின்னர் இல்லாமல் போய்விட்டது. வெறித்தனமான மேலாதிக்க மனோபாவத்தையும் ஒடுக்கும் வரலாற்றையும் பெருமைக்குரிய விடயங்களாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தை வெறும் விளக்கங்களால் மாற்றிவிட முடியுமென நான் நம்பவில்லை.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தோற்றத்தில் 21ஆம் நூற்றாண்டையும் சிந்தனையில் 5ஆம் நூற்றாண்டையும் ஒருங்கே கொண்ட இனமது. அவர்களது பழைய சிந்தனை முறையில் நவீன சிந்தனைகள் எதுவுமே தாக்கம் செலுத்த முடியவில்லையாயின் நமது விளக்கங்களால் எதைச் சாதிப்பது. என்னைப் பொறுத்தவரையில் சிங்கள தேசமானது விகாரைக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு தேசம். 1953ஆம் ஆண்டு பௌத்தத்தின் 2500 ஆண்டுகால நினைவைக் குறிக்கும் முகமாக டி.சி.விஜவர்த்தனவால் விகாரைக்குள் புரட்சி (The revolt in Temple) என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு முழுமையானதொரு சித்தாந்த பலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை சிங்கள தேசத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாமே விகாரைக்குள் புரட்சியாகத்தான் இருக்கின்றது. சிங்களம் ஒருபோதுமே விகாரைக்குள்ளிருந்து வெளியில் வரப் போவதில்லை. ஒருவேளை தமிழர் தேசியம் அதன் உச்ச இலக்கை அடையும் பொழுது அது சாத்தியப்பட சிறிது வாய்ப்புண்டு.
Get your own calendar
-கோகர்ணன்-
சிங்கம் ஒரு போதும் வாளைக் கைவிடப் போவதில்லை
* பிரச்சினை தான் என்ன? அவர்களால் தொடர்ந்தும் இனவாத அரசியலுடனும், வெறித்தனமான
தமிழர் விரோதப் போக்குடனும் எவ்வாறு இணைந்திருக்க முடிகிறது?
-வசிஸ்டர்-
சமீபத்தில் திருகோணமலையில் நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்றதும் அன்றிரவே திருகோணமலையில் உள்ள எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை விசாரித்தேன். சில நிமிட தொலைபேசி உரையாடலில் அவர் கூறிய ஒரு விடயம் எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. அந்த நண்பர் தனக்குத் தெரிந்த விடயங்களை விபரித்து விட்டு "சிங்கம் வாளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை" என மிகுந்த ஆதங்கத்துடன் கூறினார். 'சிங்கம் ஒருபோதும் வாளைக் கைவிடப் போவதில்லை' இக் கூற்றை அவர் ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் கூறினாரோ என்னவோ ஆனால் அக்கூற்றானது ஒரு ஒடுக்குமுறை வரலாற்றையே உட்கொண்டிருக்கின்றது. இன்றுவரை அந்த ஒடுக்குமுறை வரலாற்றுப் பாரம்பரியத்தில்தான் சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றுப்போக்கிலிருந்து சிங்கள மக்கள் எப்பொழுது விலகப்போகிறார்கள். அது குறித்துத்தான் இக்கட்டுரையில் பேசலாம் என நினைக்கிறேன்.
உண்மையில் திருகோணமலை சம்பவங்கள் என்னளவில் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதேயன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சிங்கள பெருந்தேசியவாதத்தின் வரலாற்றுப் போக்கையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்பட்ட அதன் அசிங்கமான முகங்களையும் அறிந்துகொண்டிருக்கும் எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தப்போவதில்லை. சிங்களம் பெரிதாக வெட்டி விழுத்தி விடப்போகிறதென எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேண்டுமானால் இச்சம்பவம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம். ஒரு வகையில் திருகோணமலை சம்பவங்கள், கடந்த நான்கு வருடங்களாக சிங்கள மக்கள் இனவாதப் போக்கிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர்கள் சகவாழ்வை விரும்புவதாகவும் கதையளந்து கொண்டிருந்த பலரின் முகத்திரையை கிழித்திருக்கின்றது.
ஆனால் இச்சம்பவங்கள் குறித்து ஜே.வி.பி.யினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நமது கவனத்துக்குரியது. அரசின் தவறுகள் காரணமாகவே திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்திருக்கின்றனர் என்பது ஜே.வி.பி.யின் வாதம். எனவே இங்கு சட்டம் என்பதன் அர்த்தம் நம்மைப் பொறுத்தவரையில் இவ்வாறுதானே அமைய முடியும். சிங்கள மேலாதிக்கத்தை பேணும்வகையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குதல் தேவைப்பட்டால் அழித்தொழித்தல் என்பதுதான் சிங்கள பௌத்தத்தின் சட்ட எல்லை. இந்த அரச கடப்பாட்டை மகிந்த அரசு செய்யத்தவறியதன் விளைவுதான் திருகோணமலையிலுள்ள சிங்கள மக்கள் அதனை நடைமுறைப்படுத்த வீதியில் இறங்கியிருக்கின்றனர். ஜே.வி.பி.யின் இக் கூற்றானது திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் நியாயத்தை வழங்கியிருப்பதுடன் சிங்களவர்களை மேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மனோபலத்தையும் வழங்குகின்றது. ஜே.வி.பி.யினர் வெளிப்படையாகவே தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் பௌத்தவாத அமைப்பினர் என்பதால் இதனை வெளிப்படையாக அவர்களால் கூறமுடிந்திருக்கிறது.
உண்மையில் சிங்கள மக்களின் பிரச்சினைதான் என்ன? அவர்களால் தொடர்ந்தும் இனவாத அரசியலுடனும், வெறித்தனமான தமிழர் விரோதப் போக்குடனும் எவ்வாறு இணைந்திருக்க முடிகிறது? நவீன சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட இத்தகையதொரு போக்கு எவ்வாறு சிங்கள மக்களுக்குள் நிலையாகத் தொழிற்படுகிறது? ஒரு வகையில் இவைகள் சுவாரஸ்யமானதும் மறுபுறம் எரிச்சல் ஊட்டக் கூடியதுமான கேள்விகள்தான். ஆனால் என்ன செய்வது சிங்கள தேசத்தின் அரசியல் அத்தகையதொரு அடித்தளத்தில் இயங்கிவருவதால் எரிச்சலூட்டக் கூடிய இக் கேள்விகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். ஜேர்மனியிலிருந்து வந்த நண்பரொருவர் கொழும்பு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் விவாதித்தார். இன்னும் பத்துவருடங்களில் சிங்கள இனவாதம் முற்றாக அழிந்து விடும். உலகமயமாக்கல் சிங்கள இனவாதப்போக்கை விழுங்கிவிடும் என்பதுதான் அந்த நண்பர் குறிப்பிட்ட விடயம்.
இப்படியான பார்வைகள் சிலரிடம் இருப்பதை நானறிவேன். ஆனால் இவ்வாறான கற்பனவாத கருத்துக்களை நிரூபிப்பதற்கான எந்தவிதமான சான்றுகளையும் சிங்களம் விட்டு வைக்கவில்லை. உலகத்தையே கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்த பகாசுர அரசியல் சூழலிலும் சிங்கள இனவாத அரசியல் மிகவும் இறுக்கமான நிலையில் தொழிற்படுவது சிலருக்கு வியப்பைக் கொடுக்கலாம். என்னளவில் இந்நிலைமை வியப்புக்குரிய ஒன்றல்ல. எனக்கு மட்டுமல்ல சிங்கள பௌத்த இனவாதப் போக்கை புரிந்துகொண்டவர்கள் எவருக்குமே இந்நிலைமைகள் வியப்புக்குரிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. சிங்கள இனவாத அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாக உருமாறி நீண்டகாலமாகிவிட்டது.
ஆரம்பத்திலிருந்தே சிங்களத்துவ அரசியல் அடிப்படைவாதப் பண்பு நிலையிலேயே தொழிற்பட்டு வந்திருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் அது தீவிர நிலையை அடைந்துவிட்டது. தமிழீழத் தேசிய எழுச்சியும் குறிப்பாக சிறிலங்கா அரசு போரில் விடுதலைப்புலிகளிடம் படுதோல்வியடைந்ததும் இந்த தீவிர நிலையின் புறக்காரணிகளாக இருக்கின்றன. தமிழ்த் தேசிய எழுச்சிக்கு முன்னர் தமிழர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையென்ற அடிப்படையில் நிலைபெற்றிருந்த சிங்கள அடிப்படைவாதம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து சிங்கத்தின் இனமான சிங்களவர்கள் தமிழர்களிடம் தோற்றுவிட்டனர் என்னும் தோல்விவாத அரசியலின் அடிப்படையில் சிங்கள அடிப்படைவாதத்தை கட்டமைக்கின்றது. இவ் அரசியல் முன்னரைக் காட்டிலும் அதிதீவிரம் மிக்கதாகவும் சிங்கள மக்களை வெறித்தனமான தமிழர் விரோதத்தில் தக்கவைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகவும் இருக்கிறது.
எனவே இப்பொழுது இலங்கையின் இனமுரண்பாடு அரசியலானது சிங்கள பௌத்த அடிப்படைவாதத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசியத்திற்கும் இடையிலான முரண்பாடாக உருமாறிவிட்டது. இந்த இடத்தில் சிலருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு இசைவாகவே நாம் ஒரு கேள்வியைக் கேட்போம். உலகமயமாக்கல் சிங்கள அடிப்படைவாதத்தை விழுங்கக் கூடிய சாத்தியமுண்டா? இன்றைய உலக அரசியல் போக்கில் உலகமயமாக்கல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மேலெழுந்திருப்பது உண்மைதான். ஆனால் மறுபுறமாக இந்த ஒற்றையொழுங்கு அரசியலுக்கு சவால்விடக்கூடிய சக்திவாய்ந்த தீவிர அரசியல்போக்காக அடிப்படைவாத அரசியல் மேலெழுந்து வருகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதமாகும். மார்க்சிய அரசியலின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒற்றையொழுங்கு அரசியல் போக்கிற்கு சவால்விடக் கூடிய மாற்று அரசியல் அற்ற நிலையிருந்தது. தற்போது அந்த இடத்தை அடிப்படைவாத அரசியல் கைப்பற்றியிருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதமானது மேற்கு எதிர்ப்பில் குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பில் மையங் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அமெரிக்க எதிர்ப்பின் மீதான தீவிரத்தைப் பொறுத்தே அமையும். ஆனால் சிங்கள பௌத்த அடிப்படைவாதமானது முற்றிலும் தமிழர் விரோதத்தில் மையங் கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிங்கள அடிப்படைவாதம் மேற்கு எதிர்ப்பினை இனங்காட்டினாலும் அதன் சாரமாக இருப்பதும் தமிழர் விரோத அரசியலேயன்றி வேறொன்றுமில்லை. நாம் ஜே.வி.பி.யின் நோர்வே எதிர்ப்பை இதற்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
இத்தகையதொரு பின்புலத்தில்தான் சாதாரண சிங்கள மக்களின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாதாரண சிங்களக் குடியானவனும் யோசிக்கிறான் இது எனக்கு மட்டுமே உரிய நாடு. தமிழர்கள் எனக்கு கீழாக வாழ வேண்டியவர்கள். அதனை அவர்கள் மீறும் பட்சத்தில் அவர்களை தண்டிக்கும் அழிக்கும் தார்மீகப் பொறுப்பும் கடப்பாடும் தனக்குண்டென சாதாரண சிங்கள மக்கள் தமது நம்பிக்கை உண்மையானது என நம்புகின்றனர். இதற்கான அரசியல் நியாயத்தையும் சமூக உளவியலையும்தான் நான் மேற்குறிப்பிட்ட சிங்கள பௌத்த அடிப்படைவாதம் வழங்கிவருகிறது. சிங்கள பௌத்த அடிப்படைவாதம் சிங்கள மக்கள் மத்தியில் நான்கு தரப்பாக தொழிற்படுகிறது. ஒன்று சிங்கள அடிப்படைவாதத்தை சிந்தனைச் சூழலில் தக்கவைக்கும் அதற்கான கருத்துருவாக் கங்களில் ஈடுபடும் சிங்கள புத்திஜீவிகள் ஊடகத்தரப்பினர், இரண்டு, அரசியல் மட்டத்தில் சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கத்தை தக்கவைக்கும் அரசியல் தரப்பினர். மற்றையவர்கள் அரசில் தரப்பினரது பௌத்த அடிப்படைவாதக் கட்டமைப்பிற்கு தமிழர் விரோத நிலையில் செயல் வடிவம் கொடுக்கும் சாதாரண சிங்கள மக்கள். இந்த மூன்றுபிரிவினரும் ஒருவரில் ஒருவர் தங்கியும் ஒருவரை ஒருவர் பலப்படுத்தும் வகையிலும் தமது இணைவை ஒழுங்கமைத்திருக்கின்றனர்.
சில காலகட்டங்களில் இதில் ஒன்று சற்று நெகிழ்வடையும் நிலையில் மற்றைய பிரிவுகள் நெகிழ்வை ஈடு செய்யும் வகையில் தொழிலாற்றும். இதில் சிங்கள ஆங்கில ஊடக தரப்பினரின் பங்கு எப்போதுமே நெகிழ்வற்ற முறையில் இயங்கிவருகிறது. இதன் காரணமாகத்தான் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எப்போதும் வெறித்தனமான தமிழர் விரோதம் ஆழ வேரூன்றியிருக்கிறது.
சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் விளங்குவதில்லை. அவர்கள் நமது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களது மேலாதிக்க மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்று விவாதிக்கும் ஒரு தரப்பினர் நம்மத்தியில் இருக்கின்றனர். இது குறித்து எனக்கு ஓரளவு இருந்த நம்பிக்கையும் திருகோணமலை சம்பவங்களுக்கு பின்னர் இல்லாமல் போய்விட்டது. வெறித்தனமான மேலாதிக்க மனோபாவத்தையும் ஒடுக்கும் வரலாற்றையும் பெருமைக்குரிய விடயங்களாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தை வெறும் விளக்கங்களால் மாற்றிவிட முடியுமென நான் நம்பவில்லை.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தோற்றத்தில் 21ஆம் நூற்றாண்டையும் சிந்தனையில் 5ஆம் நூற்றாண்டையும் ஒருங்கே கொண்ட இனமது. அவர்களது பழைய சிந்தனை முறையில் நவீன சிந்தனைகள் எதுவுமே தாக்கம் செலுத்த முடியவில்லையாயின் நமது விளக்கங்களால் எதைச் சாதிப்பது. என்னைப் பொறுத்தவரையில் சிங்கள தேசமானது விகாரைக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு தேசம். 1953ஆம் ஆண்டு பௌத்தத்தின் 2500 ஆண்டுகால நினைவைக் குறிக்கும் முகமாக டி.சி.விஜவர்த்தனவால் விகாரைக்குள் புரட்சி (The revolt in Temple) என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு முழுமையானதொரு சித்தாந்த பலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை சிங்கள தேசத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாமே விகாரைக்குள் புரட்சியாகத்தான் இருக்கின்றது. சிங்களம் ஒருபோதுமே விகாரைக்குள்ளிருந்து வெளியில் வரப் போவதில்லை. ஒருவேளை தமிழர் தேசியம் அதன் உச்ச இலக்கை அடையும் பொழுது அது சாத்தியப்பட சிறிது வாய்ப்புண்டு.
Labels: மறுபக்கம்
Sunday, April 16, 2006
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.
மறுபக்கம் - கோகர்ணன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் இன்று ஒரு அரசியற் பிரச்சினையாகியுள்ளது. உண்மையில் பல காலமாக எல்லாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் அரசியற் காரணங்கட்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கவுன்சில் எனப்படும் நிருவாக சபையில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகளும் மூதவை (செனெற்) தெரிவு செய்யும் இருவரும் வெளி உறுப்பினர்களும் இருப்பர். வெளி உறுப்பினர்களது நியமனத்தை பல்கலைக்கழக மானிய ஆணையமே (யூ.ஜி.சி.) செய்கிறது. யூ.ஜி.சி. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் யூ.ஜி.சி. வருவதாக பல்கலைக்கழகந் தொடர்பான சகல நியமனங்களும் அமைச்சரின் பொறுப்பிற்கு உட்படுகின்றன. சந்திரிகா குமாரதுங்க உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் பற்றிய முடிவு, சனாதிபதியிடமே இருந்தது. அது இன்னமும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகக் கவுன்சிலும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கிறவர்களில் தகைமையுடைய வேட்பாளர்களில் மூவரைத் தேர்தல் மூலம் பரிந்துரைக்கலாம். முதலாவது தெரிவை ஏற்பது பொதுவான நியாயமானது. தெரியப்பட்டவர் பதவிக்குத் தகாதவர் என்று கருதப்பட்டால் இரண்டாமவரையோ அவரும் தகுதியற்றவராயின் மூன்றாமவரையோ நியமிக்கலாம். அல்லது நியமனத்திற்கு மீண்டும் பேர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்கவும் இடமுண்டு. இங்கே தலைமை என்பது முற்றிலும் அரசியல் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் குழறுபடியின் தொடக்கங்கள் 1978 ஆம் ஆண்டுப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் நோக்கங்களுடன் தொடர்புடையவை. எனவே, பதிலை இந்த அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது.
பல்கலைக்கழகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற தேவை சனநாயக விரோத அரசாங்கம் ஒவ்வொன்றுக்கும் இருக்கிறது. அதுபோக, அறிஞர் பெருமக்கள் எனப்படுவோரிடையேயுள்ள பதவி மோகம் அற்பமானதல்ல. எனவே, அரசாங்கத்திற்கு உடன்பாடாக நடந்துகொள்ளக் கூடியவர்கள் மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மனமறிந்து அதற்கேற்ப நெகிழ்ந்து, திசையறிந்து காய் நகர்த்துவது ஒரு முக்கியமான தகைமையாகிறது. அப்படியிருந்தும் தப்பித் தவறி சில உருப்படியான துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களால் சுயாதீனமாக செயற்பட இயலுமாயிருந்ததாக நான் நம்பவில்லை.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நியமனங்கள் பற்றி ஆறேழு ஆண்டுகள் முன்னம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ரத்னஜீவன் ஹூல் சொன்ன பல விடயங்கள் இன்றைய நிலைவரத்துக்கும் பொருந்தும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலின் முதலாவது பரிந்துரையைத் தவிர்த்து, இரண்டாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை யூ.ஜி.சி. சனாதிபதிக்குப் பரிந்துரைத்ததாகவும் அவர் மூன்றாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை நியமித்ததாகவும் அறிகிறேன். இதிற் சட்டப்படி எவ்விதமான பிழையுமில்லை. இதற்கு முந்திய முறையும் பல்கலைக்கழகத்தின் முதலாவது தெரிவு மதிக்கப்படவில்லை.
உண்மை என்னவென்றால், யூ.ஜி.சி. நியமனங்கள் போல துணைவேந்தர் நியமனங்களும் பல்கலைக்கழகங்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஒரு துணைவேந்தர் இரண்டு முறை பதவியிலிருக்கலாம். ஒரு முறைக்கு மூன்று ஆண்டுகளாக அடுத்தடுத்து ஆறு வருடப்பதவியை அனுபவிக்க விரும்புகிற எவரும் தனது முதல் மூன்று ஆண்டுகளில் கவனமாகவே அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். எனவே, பல்கலைக்கழகத்தின் நலன்களை விட அரச விசுவாசம் (உண்மையில் ஆளுங்கட்சிக்கு விசுவாசம்) முக்கியமானதாக இருக்கும்.
எனவே, ஒரு பல்கலைக்கழகத்தைக் குட்டிச்சுவராக்குவதற்கு யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ஆட்சியாளர்களின் உண்மையான தெரிவு. என்னுடைய அனுபவத்தில், பொதுப்படச் சொல்வதானால், இப்படிப்பட்ட பதவிகட்குப் பின்னால் அலைகிற எவரும் அப்பதவி மூலம் பயனுள்ள எதையுமே செய்ததில்லை. என்றாலும், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் நியமனத்தினால் நோயாளியாகப் பாதிக்கப்படக்கூடிய பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் மாணவர்களும் தம்மால் ஏற்க இயலாத ஒரு நியமனத்தை மறுக்க நியாயம் உண்டு. அவர்களது முறைப்பாடுகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் கடமை உயர்கல்வி அமைச்சுக்கு உண்டு. இவ்வாறான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பல்கலைக்கழகத்தினுள் கொந்தளிப்பான நிலைமைகள் தொடரும். கல்வி மேலும் சீரழிய நேரிடும். எனவே, அரசாங்கம் மாணவர்களதும் பல்கலைக்கழக ஆசிரியர்களதும் ஊழியர்களது கருத்துக்களைக் கணிப்பிலெடுக்க வேண்டும். அவற்றை நிராகரித்து ஒரு நியமனத்தை அவர்கள் மீது திணிப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணச் சமூகத்துக்கும் நல்லதல்ல. நியமிக்கப்பட்டவருக்கும் நல்லதல்ல. ஏனெனில், ஒரு பல்கலைக்கழகம் பகைமையான சூழலில் இயங்குவது தகாது.
மக்களின் கருத்தை அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வற்புறுத்துவது சரியானது. ஆனால், இன்னாரை நியமிக்க வேண்டும் இன்னாரை நியமிக்கலாகாது என்று கூற முற்படுவது சரியானதல்ல. இது அரசாங்கத்தின் நடத்தையையொத்தளவு தவறானது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டபோது, (1974 ஆம் ஆண்டு நாடு முழுவதற்கும் ஒரேயொரு பல்கலைக்கழகமே இருந்தது) கைலாசபதி வளாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரும் கலைப்பீடப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரபாலாவும் அரும்பாடுபட்டு யாழ் வளாகத்தைக் கட்டியெழுப்பினர். யாழ்ப்பாணச் சமூகத்திற்கும் யாழ்ப்பாண வளாகத்துக்கும் இருந்த ஒட்டுறவுபோல ஒன்று இலங்கையின் வேறெந்தப் பல்கலைக்கழகத்திற்கோ வளாகத்திற்கோ தனது சூழலில் வாழ்ந்த மக்களுடன் இருந்ததாக அறியேன்.
யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்ட காலந்தொட்டு அதற்குக் குழிபறிப்பதிலேயே கண்ணாக இருந்தவர்கள் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள். யாழ்ப்பாண வளாகம் பலவிதமான சூழ்ச்சிகட் கூடாக புரையோடித்தான் தன்னை நிலைநிறுத்த முடிந்தது. எனினும், 1978 ஆம் ஆண்டு புதிய பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் வருகையையொட்டி வளாகம் பல்கலைக்கழகமாகியபோது கைலாசபதியோ இந்திரபாலாவோ துணைவேந்தராகக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியினர் முனைப்பாகச் செயற்பட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். முதலாவது துணைவேந்தரின் நியமனம் 1977 தேர்தலில் இரகசியக் கூட்டணிகளாக இயங்கிய யூ.என்.பி. யினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பூரண ஆசிகளுடன் நடந்தது. இது நியமிக்கப்பட்டவர்கள் தகைமை பற்றிய எனது விமர்சனமல்ல. நியமனம் நடைபெற்ற பின்னணி பற்றிய எனது கூற்று.
தமிழ்த் தலைவர்கட்கும் பல்கலைக்கழகங்கள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் பல்கலைக்கழக நிருவாகத்தில் குறுக்கிடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் அந்த அக்கறையைக் காட்டிக்கொள்ள முடியும். அப்போது பிற அரசியற் குறுக்கீடுகளை அவர்கள் கண்டிப்பதில் முழுமையான நியாயம் இருக்கும்.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. முக்கியமான பல துறைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. நான்கு ஆண்டுகட்கு முன்பு கட்டிடங்களோ ஆய்வுகூட, உபகரணங்களோ ஆசிரியர்களோ கல்வித்திட்டமோ, பாடவிதானமோ இல்லாமல், பொறியியற் பீடத்தைத் தொடங்கவும் மாணவர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த ஆலோசனைக்குப் பின்னால் பல்வேறு அரசியற் கணிப்புகளும் தனி மனிதர்களது கவனமும் இருந்தன. பிரச்சினைகள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டதன் விளைவாக அந்த அவசரத் திட்டம் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1989 முதல் 1995 வரை கடுமையான அரசியல் நெருக்கங்கள் நடுவே செயற்பட வேண்டியிருந்த போது, காலஞ்சென்ற துரைராஜாவின் நிதானமான வழிநடத்தல் மூலம் பல்கலைக்கழக கல்வி இடையூறின்றி நடைபெற்றது. அதற்குப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாண மக்களுக்குமிடையில் இருந்த நல்லுறுவு மிகவும் உதவியது.
இந்த நேரத்தில் அந்த நெருக்கடியான சூழல் பற்றி, நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. இது பல்கலைக்கழக சமூக நலன்களை முதன்மைப்படுத்த வேண்டிய வேளை, அரசாங்கம் உட்பட அனைவரும் கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
நன்றி:தினக்குரல்
09.04.2006 அன்றைய ஞாயிற்றுத் தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த
மறுபக்கக் கட்டுரையை இங்கே தருகிறேன். மூலப்பதிப்புக்கு இங்குச் செல்லவும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் இன்று ஒரு அரசியற் பிரச்சினையாகியுள்ளது. உண்மையில் பல காலமாக எல்லாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் அரசியற் காரணங்கட்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கவுன்சில் எனப்படும் நிருவாக சபையில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகளும் மூதவை (செனெற்) தெரிவு செய்யும் இருவரும் வெளி உறுப்பினர்களும் இருப்பர். வெளி உறுப்பினர்களது நியமனத்தை பல்கலைக்கழக மானிய ஆணையமே (யூ.ஜி.சி.) செய்கிறது. யூ.ஜி.சி. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் யூ.ஜி.சி. வருவதாக பல்கலைக்கழகந் தொடர்பான சகல நியமனங்களும் அமைச்சரின் பொறுப்பிற்கு உட்படுகின்றன. சந்திரிகா குமாரதுங்க உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் பற்றிய முடிவு, சனாதிபதியிடமே இருந்தது. அது இன்னமும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகக் கவுன்சிலும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கிறவர்களில் தகைமையுடைய வேட்பாளர்களில் மூவரைத் தேர்தல் மூலம் பரிந்துரைக்கலாம். முதலாவது தெரிவை ஏற்பது பொதுவான நியாயமானது. தெரியப்பட்டவர் பதவிக்குத் தகாதவர் என்று கருதப்பட்டால் இரண்டாமவரையோ அவரும் தகுதியற்றவராயின் மூன்றாமவரையோ நியமிக்கலாம். அல்லது நியமனத்திற்கு மீண்டும் பேர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்கவும் இடமுண்டு. இங்கே தலைமை என்பது முற்றிலும் அரசியல் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் குழறுபடியின் தொடக்கங்கள் 1978 ஆம் ஆண்டுப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் நோக்கங்களுடன் தொடர்புடையவை. எனவே, பதிலை இந்த அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது.
பல்கலைக்கழகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற தேவை சனநாயக விரோத அரசாங்கம் ஒவ்வொன்றுக்கும் இருக்கிறது. அதுபோக, அறிஞர் பெருமக்கள் எனப்படுவோரிடையேயுள்ள பதவி மோகம் அற்பமானதல்ல. எனவே, அரசாங்கத்திற்கு உடன்பாடாக நடந்துகொள்ளக் கூடியவர்கள் மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மனமறிந்து அதற்கேற்ப நெகிழ்ந்து, திசையறிந்து காய் நகர்த்துவது ஒரு முக்கியமான தகைமையாகிறது. அப்படியிருந்தும் தப்பித் தவறி சில உருப்படியான துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களால் சுயாதீனமாக செயற்பட இயலுமாயிருந்ததாக நான் நம்பவில்லை.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நியமனங்கள் பற்றி ஆறேழு ஆண்டுகள் முன்னம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ரத்னஜீவன் ஹூல் சொன்ன பல விடயங்கள் இன்றைய நிலைவரத்துக்கும் பொருந்தும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கவுன்சிலின் முதலாவது பரிந்துரையைத் தவிர்த்து, இரண்டாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை யூ.ஜி.சி. சனாதிபதிக்குப் பரிந்துரைத்ததாகவும் அவர் மூன்றாவதாகப் பரிந்துரைக்கப்பட்டவரை நியமித்ததாகவும் அறிகிறேன். இதிற் சட்டப்படி எவ்விதமான பிழையுமில்லை. இதற்கு முந்திய முறையும் பல்கலைக்கழகத்தின் முதலாவது தெரிவு மதிக்கப்படவில்லை.
உண்மை என்னவென்றால், யூ.ஜி.சி. நியமனங்கள் போல துணைவேந்தர் நியமனங்களும் பல்கலைக்கழகங்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஒரு துணைவேந்தர் இரண்டு முறை பதவியிலிருக்கலாம். ஒரு முறைக்கு மூன்று ஆண்டுகளாக அடுத்தடுத்து ஆறு வருடப்பதவியை அனுபவிக்க விரும்புகிற எவரும் தனது முதல் மூன்று ஆண்டுகளில் கவனமாகவே அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். எனவே, பல்கலைக்கழகத்தின் நலன்களை விட அரச விசுவாசம் (உண்மையில் ஆளுங்கட்சிக்கு விசுவாசம்) முக்கியமானதாக இருக்கும்.
எனவே, ஒரு பல்கலைக்கழகத்தைக் குட்டிச்சுவராக்குவதற்கு யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ஆட்சியாளர்களின் உண்மையான தெரிவு. என்னுடைய அனுபவத்தில், பொதுப்படச் சொல்வதானால், இப்படிப்பட்ட பதவிகட்குப் பின்னால் அலைகிற எவரும் அப்பதவி மூலம் பயனுள்ள எதையுமே செய்ததில்லை. என்றாலும், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் நியமனத்தினால் நோயாளியாகப் பாதிக்கப்படக்கூடிய பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் மாணவர்களும் தம்மால் ஏற்க இயலாத ஒரு நியமனத்தை மறுக்க நியாயம் உண்டு. அவர்களது முறைப்பாடுகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் கடமை உயர்கல்வி அமைச்சுக்கு உண்டு. இவ்வாறான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பல்கலைக்கழகத்தினுள் கொந்தளிப்பான நிலைமைகள் தொடரும். கல்வி மேலும் சீரழிய நேரிடும். எனவே, அரசாங்கம் மாணவர்களதும் பல்கலைக்கழக ஆசிரியர்களதும் ஊழியர்களது கருத்துக்களைக் கணிப்பிலெடுக்க வேண்டும். அவற்றை நிராகரித்து ஒரு நியமனத்தை அவர்கள் மீது திணிப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணச் சமூகத்துக்கும் நல்லதல்ல. நியமிக்கப்பட்டவருக்கும் நல்லதல்ல. ஏனெனில், ஒரு பல்கலைக்கழகம் பகைமையான சூழலில் இயங்குவது தகாது.
மக்களின் கருத்தை அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வற்புறுத்துவது சரியானது. ஆனால், இன்னாரை நியமிக்க வேண்டும் இன்னாரை நியமிக்கலாகாது என்று கூற முற்படுவது சரியானதல்ல. இது அரசாங்கத்தின் நடத்தையையொத்தளவு தவறானது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டபோது, (1974 ஆம் ஆண்டு நாடு முழுவதற்கும் ஒரேயொரு பல்கலைக்கழகமே இருந்தது) கைலாசபதி வளாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரும் கலைப்பீடப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரபாலாவும் அரும்பாடுபட்டு யாழ் வளாகத்தைக் கட்டியெழுப்பினர். யாழ்ப்பாணச் சமூகத்திற்கும் யாழ்ப்பாண வளாகத்துக்கும் இருந்த ஒட்டுறவுபோல ஒன்று இலங்கையின் வேறெந்தப் பல்கலைக்கழகத்திற்கோ வளாகத்திற்கோ தனது சூழலில் வாழ்ந்த மக்களுடன் இருந்ததாக அறியேன்.
யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்ட காலந்தொட்டு அதற்குக் குழிபறிப்பதிலேயே கண்ணாக இருந்தவர்கள் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள். யாழ்ப்பாண வளாகம் பலவிதமான சூழ்ச்சிகட் கூடாக புரையோடித்தான் தன்னை நிலைநிறுத்த முடிந்தது. எனினும், 1978 ஆம் ஆண்டு புதிய பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் வருகையையொட்டி வளாகம் பல்கலைக்கழகமாகியபோது கைலாசபதியோ இந்திரபாலாவோ துணைவேந்தராகக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியினர் முனைப்பாகச் செயற்பட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். முதலாவது துணைவேந்தரின் நியமனம் 1977 தேர்தலில் இரகசியக் கூட்டணிகளாக இயங்கிய யூ.என்.பி. யினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பூரண ஆசிகளுடன் நடந்தது. இது நியமிக்கப்பட்டவர்கள் தகைமை பற்றிய எனது விமர்சனமல்ல. நியமனம் நடைபெற்ற பின்னணி பற்றிய எனது கூற்று.
தமிழ்த் தலைவர்கட்கும் பல்கலைக்கழகங்கள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் பல்கலைக்கழக நிருவாகத்தில் குறுக்கிடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் அந்த அக்கறையைக் காட்டிக்கொள்ள முடியும். அப்போது பிற அரசியற் குறுக்கீடுகளை அவர்கள் கண்டிப்பதில் முழுமையான நியாயம் இருக்கும்.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. முக்கியமான பல துறைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. நான்கு ஆண்டுகட்கு முன்பு கட்டிடங்களோ ஆய்வுகூட, உபகரணங்களோ ஆசிரியர்களோ கல்வித்திட்டமோ, பாடவிதானமோ இல்லாமல், பொறியியற் பீடத்தைத் தொடங்கவும் மாணவர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த ஆலோசனைக்குப் பின்னால் பல்வேறு அரசியற் கணிப்புகளும் தனி மனிதர்களது கவனமும் இருந்தன. பிரச்சினைகள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டதன் விளைவாக அந்த அவசரத் திட்டம் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1989 முதல் 1995 வரை கடுமையான அரசியல் நெருக்கங்கள் நடுவே செயற்பட வேண்டியிருந்த போது, காலஞ்சென்ற துரைராஜாவின் நிதானமான வழிநடத்தல் மூலம் பல்கலைக்கழக கல்வி இடையூறின்றி நடைபெற்றது. அதற்குப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாண மக்களுக்குமிடையில் இருந்த நல்லுறுவு மிகவும் உதவியது.
இந்த நேரத்தில் அந்த நெருக்கடியான சூழல் பற்றி, நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. இது பல்கலைக்கழக சமூக நலன்களை முதன்மைப்படுத்த வேண்டிய வேளை, அரசாங்கம் உட்பட அனைவரும் கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
நன்றி:தினக்குரல்
Labels: மறுபக்கம்
Search
முந்தியவை
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரன் பிள்ளைகள்
- கரும்புலி லெப்.கேணல் பூட்டோ
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- அமெரிக்க ஏகாதிபத்தியம்
- இலங்கையில் ஊடகங்களும் பிரித்தாளும் தந்திரமும்
- பகிரப்படாத பக்கங்கள். 1.
- அமெரிக்க அரசியலும் சதாமும்
- இந்தியா பிச்சை போடுமா?
- அன்னியசக்திகளை ஈழத்தமிழர் நம்பலாமா?
களஞ்சியம்
இறுதிப் பின்னூட்டங்கள்
-
வன்னியன் commented:
நாணயமானவரே,கவ்விப் பிடிச்சியள் பாருங்கோ ஒரு பிடி.பேராசிரியர் சொல்கிற அரசியல், ஊழல் ஆராயப...
Anonymous commented:
எழுதிக்கொள்வது: நாணயமானவர்//கருணாநிதியின் அரசியலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என...
வெற்றி commented:
வன்னி,பதிவுக்கு மிக்க நன்றி.
Anonymous commented:
//1930 களில் ஜேர்மனியில் உருவான யூத இனவிரோதம் பின்பு கம்யூனிச/ இடதுசாரி விரோதமாகி இறுதியில...
வன்னியன் commented:
வருகை தந்து கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.
Anonymous commented:
வைகோ பிர்பாகரனின் தமிழக கொள்கை பரப்பு செயளாளர், வைக்கோ அவரின் கடைமை செய்கிறார், தமிழகத்தில...
Anonymous commented:
நல்ல கட்டுரை.பதிந்ததற்கு நன்றி.
Links
- Wikipedia
- Firefox

hit Counter
_____________________
Click Here To Earn Money____________________